மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இளைஞரின் வயிற்றில் 29 கரண்டிகள், 19 டூத் பிரஷ்கள்: மருத்துவர்கள் அதிர்ச்சி!

இளைஞர் வயிற்றிலிருந்து டூத் பிரஷ், ஸ்பூன்களை அகற்றிய மருத்துவர்கள்..

News image

இளைஞரின் வயிற்றில் இருந்தவை அகற்றும் மருத்துவர்கள்

Updated On :26 செப்டம்பர் 2025, 9:35 am

உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் இளைஞர் ஒருவரின் வயிற்றிலிருந்து 29 ஸ்டீல் ஸ்பூன், 19 டூத் பிரஷ்களை மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காசியாபாத்தில் இந்த வினோதமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹாப்பூரில் வசித்துவருபவர் 35 வயதான சச்சின். போதைப்பொருளுக்கு அடிமையான இவர் போதைப்பொருள் மறுவாழ்வு மையத்திற்குச் சிகிச்சைக்காக வந்திருந்தார். அங்கு அவருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, மருத்துவர்கள் பரிசோதித்தனர். அவரது வயிற்றை ஸ்கேன் செய்தபோது மருத்துவர்கள் அதிர்ந்துபோனார்கள்.

அவரது வயிற்றில் இரண்டு பேனாக்கள், 29 ஸ்டீல் ஸ்பூன்கள், 19 பல் துலக்கும் பிரஷ்கள் இருப்பது கண்டறிந்தனர். இதையடுத்து மருத்துவர்கள் எண்டோஸ்கோபி மூலம் அகற்ற முயற்சித்தனர். ஆனால் வயிற்றில் அதிகளவிலான பொருள்கள் இருந்ததால் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு, அவற்றை வெளியேற்றினர்.

இதுதொடர்பாக சச்சினிடம் மருத்துவர்கள் விசாரித்தனர். மறுவாழ்வு மையத்தில், தினமும் அவருக்குச் சிறிதளவு உணவு, கொஞ்சம் காய்கறி, ஒரு சில சப்பாத்திகள் மட்டும் வழங்கப்படுகிறது. அவரது வீட்டிலிருந்து கொடுத்து அனுப்பும் எந்தவித உணவும் அவருக்கு போய் சேருவதில்லை. சில நேரங்களில் ஒரு பிஸ்கட் மட்டுமே வழங்கப்படுகிறது.

பசி தாளாமல் கோபமடைந்த அந்த இளைஞர், கரண்டி மற்றும் பிரஷ்களைத் திருடி அதைக் குளியலறைக்குக் கொண்டுசென்று, அவற்றைத் துண்டுகளாக உடைத்து வாயில் வைத்து தொண்டையில் திணிப்பாராம், சில சமயங்களில் தண்ணீர் ஊற்றி விழுங்குவாராம்.

பெரும்பாலும் உளவியல் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு இதுபோன்று ஏற்படுவதுண்டு என்று சச்சினுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட மருத்துவர் டாக்டர் ஷியாம் குமார் கூறினார்.

Summary

At a de-addiction centre in Uttar Pradesh's Ghaziabad, an angry patient would steal spoons from a pile of utensils and push them down his throat.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.