காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

லடாக் வன்முறை - ஜென் ஸீ போராட்டம் அல்ல! காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு!

லடாக்கில் வன்முறையைத் தூண்டியதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது

வன்முறையையடுத்து, தீவிர பாதுகாப்புப் பணியில் பாதுகாப்புப் படையினர் - PTI

Published On :

லடாக்கில் வன்முறையைத் தூண்டியதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டார்.

யூனியன் பிரதேசமான லடாக்கில் மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டணையை நீட்டித்தல் தொடர்பாக, செப்டம்பர் 10 ஆம் தேதிமுதல் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்பட 15 பேர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர்.

சோனம் வாங்சுக்

சோனம் வாங்சுக்

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இருவரின் உடல்நிலை செவ்வாய்க்கிழமையில் (செப். 23) மோசமடைந்ததையொட்டி, அப்பகுதியில் போராட்டம் வெடித்தது.

இதனிடையே, புதன்கிழமை காலையில் இளைஞர்கள் குழு ஒன்று, தீவைப்பு மற்றும் வன்முறையில் ஈடுபட்டதுடன், பாஜக அலுவலகத்தையும் தாக்க முற்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது, 4 பலியாகினர்; மேலும், 30 காவல்துறையினர் உள்பட சுமார் 60 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலர் மோசமான நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

வன்முறை தீவிரமடைந்ததையடுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை சோனம் வாங்சுக் முடித்துக் கொண்டார்.

லடாக்கில் மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டவணையை நீட்டிப்பது குறித்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகக் கூறிய மத்திய அரசு, பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தில் சிலருக்கு மகிழ்ச்சி இல்லை என்று சோனம் மீது குற்றம் சாட்டியது.

மேலும் வங்கதேசம் மற்றும் நேபாளம் போன்று ஒரு சூழ்நிலையை இந்தியாவிலும் உருவாக்கும் முயற்சியாக காங்கிரஸின் மோசமான சதிதான், இந்த வன்முறை என்று பாஜக குற்றம் சாட்டியது.

அதுமட்டுமின்றி, ``லடாக் வன்முறையை ஜென் ஸீ போராட்டம்போல சித்திரிக்க முயற்சி நடந்தததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால், அது ஜென் ஸீ போராட்டம் அல்ல; காங்கிரஸின் போராட்டம்தான் என்பது தெரிந்தது’’ என்று பாஜக எம்.பி. சம்பித் பத்ரா கூறினார்.

இந்த நிலையில், மாநிலத்தில் வன்முறையைத் தூண்டியதாக, தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றிரவு அல்லது நாளை காலையில் அவர் லடாக்கைவிட்டு வெளியேற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Summary

Ladakh: Sonam Wangchuk Arrested Under Stringent NSA

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.