நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
கிழக்கு நேபாளத்தின் ரமேச்சாப் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் எந்தவிதமான சேதமும் ஏற்பட்டதாக உடனடித் தகவல் இல்லை.
தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின்படி, காத்மாண்டுவிலிருந்து சுமார் 150 கி.மீ கிழக்கே உள்ள ரமேச்சாப் மாவட்டத்தின் வடைலி பகுதியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, ஆகஸ்ட் 17ஆம் தேதியும் இதே மாவட்டத்தில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. இமயமலையின் நில அதிர்வு மண்டலத்தில் அமைந்திருப்பதால் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
Summary
A magnitude 4 earthquake jolted Rarmechhap district in eastern Nepal on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகாராஷ்டிரத்தில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்

சிக்கிமில் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!

நேபாளம்: பேருந்து கவிழ்ந்து 7 இந்தியர்கள் பலி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


