திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பிகாரில் 2வது நாளாக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய அமித் ஷா!

பிகாரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துரையாடினார்.

News image

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Updated On :27 செப்டம்பர் 2025, 3:36 pm IST

பிகாரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கலந்துரையாடினார்.

இந்தாண்டு இறுதியில் பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி அரசியல் தலைவர்கள் பிகாரில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் இரண்டாவது நாளாக இன்று பிகாரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் அமித் ஷா.

இதுதொடர்பாக மாநில பாஜக தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் கூறியதாவது,

நேற்று மேற்கு சம்பாரனில் உள்ள பெட்டியாவில் அமித் ஷா ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். அதைத்தொடர்ந்து மாநில தலைமையகத்தில் பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் என்டிஏ வெற்றிபெறுவதற்கான மந்திரத்தை அவர் எங்களுக்கு வழங்கினார். இந்தக் கூட்டத்தின்போது பத்து மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இன்று அமித் ஷா சரைரஞ்சன் (சமஸ்திபூர்) மற்றும் ஃபோர்ப்ஸ்கஞ்ச் (அராரியா) ஆகிய இடங்களில் பாஜக நிர்வாகிகளைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். கடந்த 15 நள்களுக்குள் அமித் ஷாவின் இரண்டாவது பிகார் சுற்றுப்பயணம் இதுவாகும்.

அமித் ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணம் முடிப்பதற்கு முன்பு சமஸ்திபூர் மற்றும் அராரியா மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

முன்னதாக செப்டம்பர் 18, 19 அன்று ரோஹ்தாஸ், பெகுசராய் மாவட்டங்களில் நடந்த கட்சி மாநாடுகளில் உரையாற்றினார். அப்போது, ​இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பிகார் ஊடுருவல்காரர்களால் நிரம்பி வழியும், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று காங்கிரஸின் "வாக்கு திருட்டு" கதையை முறியடிக்க வேண்டும் என பாஜக தொண்டர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

Summary

Union Home Minister Amit Shah gave a pep talk to BJP workers in north Bihar for the second consecutive day on Tuesday in the run-up to the assembly polls, which are expected to be announced soon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.