மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தில்லியில், தனியார் கல்வி மையத்தின் இயக்குநர் சைதந்யானந்த் சரஸ்வதி கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், கல்வி மைய வளாகத்தில் இருந்த டார்ச்சர் அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்த சிசிடிவி கேமராக்களும் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. கைது செய்யப்பட்ட சைதன்யானந்த் சரஸ்வதியின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதோடு, புகார் கொடுத்தவரை, வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டியதாக, சைதன்யானந்த் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சைதன்யானந்த், தனியார் கல்வி மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவரது அலுவலகம், வாழும் இடம் உள்ளிட்டவற்றை அடையாளம் காட்டினார். அங்கிருந்து பல தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
அதே வளாகத்தில், மாணவிகளை டார்ச்சர் செய்ய பயன்படுத்திய அறை ஒன்றுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும், அவரது செல்போன் பாஸ்வார்டை கேட்டதற்கு, தான் மறந்துவிட்டதாகவும், பதற்றமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மாணவிகளை தொடர்புகொள்ள இந்த செல்போனை பயன்படுத்தியிருந்ததும், கல்வி மைய வாளகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் அவர் தலைமறைவாக இருந்தபோதும் தன்னுடைய செல்போனில் நேரடியாக கண்காணித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் பள்ளிகளில் சிறப்புக் குழந்தைகள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவா்களுக்கான ஆன்லைன் சோ்க்கை தொடக்கம்: ஜூன் 30 வரை விண்ணப்பிக்க தில்லி அரசு அனுமதி

செங்கல்பட்டில் உயா் கல்வி வழிகாட்டுதல் கட்டுப்பாட்டு அறை: ஆட்சியா் திறந்து வைத்தாா்

’மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணா்வு நிகழ்ச்சி

இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் நிறைவு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



