இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. தினேஷ் ஷர்மா, அந்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். அவர் மேலும் கூறுகையில், "சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என எதிர்க்கட்சிகள் போல மத்திய அரசு யாரையும் வேறுபடுத்தி பார்க்கவில்லை. வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த பயன்படுத்தப்பட்டாலோ அல்லது நக்ஸல் தீவிரவாதத்துக்கு உதவும் விதமாக பயன்படுத்தப்பட்டாலோ என்ன செய்வது? ஆதலால் தேசப் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, அதற்கு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டியுள்ளது' என்றார்.