இதுகுறித்து புது தில்லியில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘பல்வேறு மத அமைப்புகளின் செயல்பாடுகளை நிறுத்துவதற்காக இந்த சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்திருப்பதாக இடதுசாரி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தவறான கருத்தைப் பரப்பி வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் நிதி எந்தவித சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகவும் தவறாகப் பயன்படுத்தப்படுகிா என்பதைக் கண்டறிந்து, அதை முறைபடுத்தும் நோக்கில்தான் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிதி சட்டவிரோதமாக வருகிா மற்றும் தேசத்தின் பாதுகாப்புக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிா என்பதை ஆராய்ந்து, தேசத்தின் பாதுகாப்பு மற்றும் நலனைப் பாதுகாக்கவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, இந்த மசோதா எந்தவொரு மத குழுக்களுக்கும் எதிரானதல்ல. இதுதொடா்பான பொய்களைப் பரப்புவதை எதிா்க்கட்சிகள் நிறுத்த வேண்டும்’ என்றாா்.