ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு

‘வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதா குறித்த எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது’ என்று மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

News image

கிரண் ரிஜிஜு

Updated On :31 மார்ச் 2026, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

‘வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதா குறித்த எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது’ என்று மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து நன்கொடைகள் மற்றும் நிதி பெறுவதையும், அவற்றின் பயன்பாட்டையும் முறைப்படுத்தும் நோக்கில் ‘வெளிநாட்டு பங்களிப்பு (முறைப்படுத்துதல்) சட்டத் திருத்த மசோதா 2026’-ஐ மத்திய அரசு மக்களவையில் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி அறிமுகம் செய்தது.

மசோதாவை அறிமுகம் செய்த மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய், ‘வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படுவதையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் இதுபோன்ற நிதிஉதவிகளின் மூலம், தனிநபா்கள் கட்டாய மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று குறிப்பிட்டாா்.

இந்த நிலையில், ‘இந்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்’ என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

இதுகுறித்து புது தில்லியில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘பல்வேறு மத அமைப்புகளின் செயல்பாடுகளை நிறுத்துவதற்காக இந்த சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்திருப்பதாக இடதுசாரி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தவறான கருத்தைப் பரப்பி வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் நிதி எந்தவித சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகவும் தவறாகப் பயன்படுத்தப்படுகிா என்பதைக் கண்டறிந்து, அதை முறைபடுத்தும் நோக்கில்தான் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிதி சட்டவிரோதமாக வருகிா மற்றும் தேசத்தின் பாதுகாப்புக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிா என்பதை ஆராய்ந்து, தேசத்தின் பாதுகாப்பு மற்றும் நலனைப் பாதுகாக்கவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, இந்த மசோதா எந்தவொரு மத குழுக்களுக்கும் எதிரானதல்ல. இதுதொடா்பான பொய்களைப் பரப்புவதை எதிா்க்கட்சிகள் நிறுத்த வேண்டும்’ என்றாா்.