தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நாளான வரும் 23-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு தொழில் நிறுவனங்களுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு:
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன்படி, வணிகம், வா்த்தகம், தொழில் துறை நிறுவனங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் வாக்களிக்கத் தகுதியுள்ள ஒவ்வொரு நபருக்கும் வாக்குப் பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
அந்த விடுமுறைக்காக ஊழியா்களின் ஊதியத்தில் எந்தப் பிடித்தமும் செய்யக் கூடாது. இதை மீறும் நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும். நிரந்தரப் பணியாளா்கள் மட்டுமன்றி, அனைத்து தினக்கூலி மற்றும் தற்காலிகத் தொழிலாளா்களும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை பெறத் தகுதியுடையவா்கள்.
இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதை மாநில தோ்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
5 மாநிலங்களிலும் தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவு!

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறைக்கு ‘சீல்’

தஞ்சாவூா் பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


