இலங்கையிலிருந்து 30 மீனவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பியதாக இந்திய உயர் ஆணையரகம் செவ்வாய்க்கிழமை (ஏப். 7) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய உயர் ஆணையரகம் தனது எக்ஸ் தளப் பதிவில், “இலங்கையில் சிக்கிய 30 இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக தாயகம் அழைத்துவரப்பட்டு, தற்போது அவரவர்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மீனவர் பிரச்னை ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாகும். இலங்கை நீர்ப்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படும் பல சம்பவங்களில், பாக் நீரிணையில் இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டையும் இலங்கையையும் பிரிக்கும் குறுகிய நீர்ப்பரப்பான பாக் நீரிணை, இரு நாட்டு மீனவர்களுக்கும் ஒரு செழிப்பான மீன்பிடித் தளமாக விளங்குகிறது.
அதேவேளையில், இரு நாடுகளின் மீனவர்களும், அறியாமல் ஒருவருக்கொருவர் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதால் அடிக்கடி கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மேலும், இலங்கை கடற்படையின் தகவல்படி, 2026 ஜனவரி முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை, 15 இழுவைப் படகுகளும் 102 இந்திய மீனவர்களும் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 Indian fishermen were repatriated from Sri Lanka today and are on their way home.@MEAIndia @IndianDiplomacy pic.twitter.com/LBTWo7qFXM
— India in Sri Lanka (@IndiainSL) April 7, 2026
Summary
The High Commission of India stated on Tuesday (April 7) that 30 fishermen have safely returned to their homeland from Sri Lanka.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி 2-வது நாளாக வேலைநிறுத்தம்!

இலங்கை சிறைக் கலவரம்: பலி எண்ணிக்கை 27-ஆக உயர்வு!

முத்தரப்பு ஒருநாள் தொடரை வென்ற இந்தியா ஏ அணி!

சதத்தை தவறவிட்ட சூர்யவன்ஷி: இந்தியா ஏ 377 ரன்கள் குவிப்பு!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



