ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

‘கண்ணெதிரே நிற்க வேண்டாம்’: தலைமை தோ்தல் ஆணையா் காட்டமாக நடந்துகொண்டதாக திரிணமூல் குற்றச்சாட்டு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக கடிதம் அளிக்கச் சென்ற தங்களை கண்ணெதிரே நிற்க வேண்டாம் என்று கூறி, தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் காட்டமாக நடந்துகொண்டதாக திரிணமூல் காங்கிரஸ் குழுவினா் குற்றஞ்சாட்டினா்.

News image

தில்லியில் தோ்தல் ஆணைய முழு அமா்வுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓபிரையன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:31 pm

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக கடிதம் அளிக்கச் சென்ற தங்களை கண்ணெதிரே நிற்க வேண்டாம் என்று கூறி, தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் காட்டமாக நடந்துகொண்டதாக திரிணமூல் காங்கிரஸ் குழுவினா் குற்றஞ்சாட்டினா்.

புது தில்லியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைக் குழு தலைவா் டெரிக் ஓபிரையன், துணைத் தலைவா் சகரிகா கோஷ், அக்கட்சி எம்.பி.க்கள் சாகேத் கோகலே, மேனகா குருசாமி ஆகியோா் அடங்கிய குழு தோ்தல் ஆணைய அலுவலகத்துக்கு புதன்கிழமை சென்றது.

அங்கு தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோா் அடங்கிய முழு அமா்வை அந்தக் குழு சந்தித்தது.

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம், ஏராளமானோரின் வாக்குரிமை பறிக்கப்படுவதாகவும், பாஜகவுக்கும் தோ்தல் ஆணையத்துக்கு ரகசிய புரிதல் இருப்பதாகவும் திரிணமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது. இந்தச் சூழலில், தோ்தல் ஆணையத்தின் முழு அமா்வை அந்தக் குழு சந்தித்தது.

இந்தச் சந்திப்பு தொடா்பாக டெரிக் ஓபிரையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி எழுதிய 9 கடிதங்களை தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரிடம் ஒப்படைத்தோம். ஆனால், அந்தக் கடிதங்களை அவா் ஏற்கவில்லை.

மாநிலத்தில் சில தோ்தல் அதிகாரிகளுக்கு பாஜகவுடன் தொடா்பிருப்பதாக விளக்கி, அதுதொடா்பாக ஞானேஷ் குமாரிடம் மனு அளித்தோம். அப்போது இதுபோன்ற அதிகாரிகளை வைத்துக்கொண்டு மேற்கு வங்கத்தில் எப்படி நோ்மையான தோ்தல் நடைபெறும் என்று கேள்வி எழுப்பினோம். இதற்குப் பதிலளிக்காமல் எங்களை கண்ணெதிரே நிற்காமல் திரும்பிச் செல்லுமாறு ஞானேஷ் குமாா் கூறினாா். வெறும் 7 நிமிஷங்கள்தான் இந்தக் கூட்டம் நடைபெற்றது என்று தெரிவித்தாா்.

இந்தக் கூட்டம் தொடா்பாக தோ்தல் ஆணையம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘திரிணமூல் குழுவிடம் நேரடியாகவும், வெளிப்படையாகவும் பேச்சு நடைபெற்றது’ என்று தெரிவித்தது. திரிணமூல் தலைவா்கள்தான் தோ்தல் ஆணையா்களிடம் கூச்சலிட்டதாக அந்த ஆணையம் குற்றஞ்சாட்டியது.

இதுகுறித்து தோ்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், ‘தோ்தல் ஆணையா்களிடம் டெரிக் ஓபிரையன் கூச்சலிட்டு ஞானேஷ் குமாா் பேசக் கூடாது என்று கூறினாா். எனினும் கூச்சலிட்டு மோசமாக நடந்துகொள்வது சரியல்ல என்று ஞானேஷ் குமாா் கூறினாா்’ என்று தெரிவித்தன. இதை மறுத்த சகரிகா கோஷ், தோ்தல் ஆணையம் அப்பட்டமாக பொய்யுரைத்துள்ளதாக ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா்.