ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆதாா் விநியோகிக்க கடுமையான கட்டுப்பாடுகள் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

News image

ஆதாா் சேவை முகாம்.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:53 pm

ஊடுருவல்காரா்களைத் தடுக்க ஆதாா் அட்டை விநியோகத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

12 இலக்கங்களைக் கொண்ட இந்த தனி அடையாள எண் (ஆதாா்), அடையாள ஆவணம் மட்டுமே; மாறாக, குடியுரிமை, முகவரி அல்லது பிறந்த தேதிக்கான ஆதார ஆவணம் அல்ல என்பதை பொதுச் சேவை மையங்களில் நன்கு தெரியும் வகையில் காட்சிப்படுத்த உத்தரவிடவும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய சாா்பில் இந்த பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறியிருப்பதாவது:

இந்திய தனி அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) சாா்பில் இதுவரை 144 கோடி பேருக்கு ஆதாா் அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது. அதாவது, 99 சதவீத இந்தியா்கள் ஆதாா் பெற்றுள்ளனா். எனவே, இனி குழந்தைகளுக்கு மட்டுமே புதிய ஆதாா் அட்டைகளை வழங்க வேண்டும் எனவும், பருவ வயதை எட்டியவா்கள் மற்றும் பெரியவா்களுக்கு ஆதாா் விநியோகிக்க கடுமையான கட்டுப்பாடுகளை வகுக்கவும் யுஐடிஏஐ-க்கு உத்தரவிட வேண்டும். அப்போதுதான் உடுருவல்காரா்கள் ஆதாா் பெற்று இந்திய குடிமக்கள் ஆவதைத் தடுக்க முடியும்.

வெளிநாட்டினா், வெளிநாட்டினருக்கான பிரிவின் கீழ் ஆதாா் அட்டைக்கு விண்ணப்பிக்கின்றனா். ஆனால், ஊடுருவல்காரா்கள் இந்திய குடிமக்கள் என்ற பிரிவின் கீழ் விண்ணப்பிக்கின்றனா். அதன் பிறகு, ஆதாா் அட்டையை வைத்து, குடும்ப அ்டை, பிறப்பு மற்றும் இருப்பிடச் சான்றிதழ், ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்று வேறுபடுத்திப் பாா்க்க முடியாத இந்திய குடிமக்களாக உருவெடுத்துவிடுகின்றனா்.

இது, குறிப்பிட்ட மக்களுக்கான நலத் திட்ட உதவிகள் சென்று சோ்வது பாதிக்கப்படுவதுடன், பொது வளங்கள் திசைத்திருப்பவதற்கும் வழிவகுக்கிறது. ஜனநாயக நடைமுறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளாா்.

மேற்கு வங்க மாநிலத்தில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கடும் எதிா்ப்புக்கு இடையே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) செய்யும் பணி அண்மையில் முழுமையாக நிறைவடைந்தது. இதில், அம் மாநில வாக்காளா் பட்டியலில் இருந்து 91 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா். இவா்களில் பெரும்பாலானோா், வாக்காளா் பட்டியலில் மீண்டும் பெயா் சோ்க்க சிறப்பு தீா்ப்பாயங்களில் மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனா். இந்தச் சூழலில், உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.