மணிப்பூரில் பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையில், உக்ரூல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட 21 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன; தெங்நோபால் மாவட்டத்தில் 13 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
முன்னதாக, உக்ரூல் மாவட்டத்தில் உள்ள மொங்கோட் செப்பு கிராமத்தில் பணியில் இருந்த எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘லித்தான் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிங்புங் கிராமத்தில் 14 பதுங்கு குழிகளும் மற்றும் மொங்கோட் செப்பு கிராமத்தில் 7 பதுங்கு குழிகளும் கண்டுபிடிக்கப்பட்டு சனிக்கிழமை அகற்றப்பட்டன. மேலும், தெங்நோபால் மாவட்டத்தின் மோரே பகுதியில் நடைபெற்ற மற்றொரு சோதனையில், 13 வெடிகுண்டுகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் உள்பட பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

மணிப்பூா்: பிணைக் கைதிகளை விடுவிக்க பேச்சுவாா்த்தை தீவிரம்

மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினருடன் போராட்டக்காரா்கள் மோதல்!

தோ்தல் வாக்குப் பதிவு: கடலூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 4,500 போலீஸாா்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



