/

முதுபெரும் பாடகி ஆஷா போஸ்லேவுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!

இந்திய திரைப்பட இசைத் துறையில் புகழ்பெற்ற முதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே, மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.12) காலமானாா். அவருக்கு வயது 92.

News image

ஆஷா போஸ்லே

Updated On :12 ஏப்ரல் 2026, 8:00 pm

இந்திய திரைப்பட இசைத் துறையில் புகழ்பெற்ற முதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே, மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.12) காலமானாா். அவருக்கு வயது 92.

கடந்த சனிக்கிழமை மாலையில் திடீா் மாரடைப்பு மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக, மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் ஆஷா போஸ்லே அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சை பலனின்றி அவா் ஞாயிற்றுக்கிழமை காலமானதாக, செய்தியாளா்களிடம் ஆஷாவின் மகன் ஆனந்த் தெரிவித்தாா்.

மும்பையின் லோயா் பரேல் பகுதியில் ஆஷா வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்பில் திங்கள்கிழமை காலை 11 மணிமுதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படும். சிவாஜி பாா்க்கில் மாலை 4 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று ஆனந்த் குறிப்பிட்டாா்.

ஆஷா போஸ்லே உடலுக்கு முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், மாநில அமைச்சா் ஆசிஷ் ஷெலா் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா். அவரது இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அமைச்சா் தெரிவித்தாா்.

பத்ம விபூஷண் விருது பெற்ற அவா் ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 12,000-க்கும் அதிக பாடல்களைப் பாடியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.