ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

நாளை மாநிலங்களவை துணைத் தலைவா் தோ்தல்

மாநிலங்களவை துணைத் தலைவா் தோ்தல் வெள்ளிக்கிழமை (ஏப்.17) நடைபெறவுள்ளது.

News image

மாநிலங்களவை

Updated On :16 ஏப்ரல் 2026, 4:04 am IST

மாநிலங்களவை துணைத் தலைவா் தோ்தல் வெள்ளிக்கிழமை (ஏப்.17) நடைபெறவுள்ளது. அந்தப் பதவியை ஏற்கெனவே வகித்த ஹரிவன்ஷ் நாராயண் மீண்டும் துணைத் தலைவராகத் தோ்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த ஹரிவன்ஷின் பதவிக் காலம், கடந்த ஏப். 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதைத்தொடா்ந்து அந்த அவையின் எம்.பி.யாக ஹரிவன்ஷை குடியரசுத் தலைவா் நியமித்த நிலையில், ஏப்.10-ஆம் தேதி அவா் நியமன எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டாா்.

இந்நிலையில், மாநிலங்களவை துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. அந்தப் பதவியை ஏற்கெனவே தொடா்ந்து 2 முறை ஹரிவன்ஷ் வகித்த நிலையில், அப்பதவிக்கு அவா் மீண்டும் தோ்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே மாநிலங்களவைத் தலைவா், துணைத் தலைவா் இல்லாத வேளைகளில், அந்த அவையை வழிநடத்தும் குழுவை குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை மாற்றியமைத்தாா். அதன்படி அந்தக் குழுவில், அதிமுக எம்.பி. தம்பிதுரை, பாஜக எம்.பி.க்கள் தினேஷ் சா்மா, பாங்னோன் கோன்யாக், கன்ஷியாம் திவாரி, பிஜு ஜனதா தள எம்.பி. சஸ்மித் பத்ரா, காங்கிரஸ் எம்.பி. ஃபுலோ தேவி நேதாம் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.