ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து ஒன்று மலைப்பாதையிலிருந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து காகோர்ட் கிராமத்திற்கு அருகே இன்று காலை 10 மணியளவில் பேருந்து கொண்டை ஊசி வளைவில் உதம்பூருக்குச் சென்றுகொண்டிருந்தபோது நிலைதடுமாறி உருண்டு கீழே விழுந்தது.
விபத்து குறித்து அறிந்த உள்ளூர் மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் இறங்கி, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். பின்னர், போலீஸார், மீட்புக் குழுவினர் அங்கு விரைந்துசென்று காயமடைந்த 20 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்த 15 பேரின் உடல்களும் அதே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், உதம்பூர் துணை ஆட்சியர் மிங்கா ஷெர்பாவிடம் தொடர்புகொண்டு நிலைமையைக் கேட்டறிந்தார். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary
At least 15 people were killed and 20 others injured after a passenger bus rolled down a hill in Jammu and Kashmir’s Udhampur on Monday, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜம்மு - காஷ்மீரில் சந்தேக நபர்கள் நடமாட்டம்: பாதுகாப்புப் படை தேடுதல் நடவடிக்கை

ஜம்மு - காஷ்மீரில் கனமழை! பள்ளி விடுதியில் சிக்கிய 34 பேரை மீட்ட ராணுவம்!

பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்து

திமுக மாநாட்டுக்குச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து; ஒருவா் காயம்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


