11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

பாஜக ஆட்சி அமைப்பதை யாரும் விரும்பவில்லை: மேதினிப்பூரில் மமதா!

கிழக்கு மேதினிப்பூர் பிரசாரக் கூட்டத்தில் மமதா பானர்ஜி..

News image

மமதா - DPS

Updated On :21 ஏப்ரல் 2026, 4:43 pm IST

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து நான்காவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வரும் என அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி உறுதியாகத் தெரிவித்தார்.

கிழக்கு மேதினிப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹால்டியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மமதா பானர்ஜி பேசினார்.

மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசைப் பதவியிலிருந்து அகற்ற, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்.

இந்த முறை மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக வெற்றி பெறாது. திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும். தில்லியிலிருந்தும் பாஜகவை நாங்கள் வெளியேற்றுவோம் என உறுதியளித்தார்.

கடந்த ஒரு மாதமாக மேற்கு வங்கம் முழுவதும் தான் தீவிரமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். இக்காலகட்டத்தில் மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை நன்கு புரிந்துகொண்டேன். மக்கள் பாஜகவை விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

நிதி முறைகேடுகள் மற்றும் பிற விவகாரங்கள் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் அரசின் மீது பாஜக வெளியிட்ட குற்றப்பத்திரிகையைக் கடுமையாகச் சாடிய முதல்வர், ஹால்டியா துறைமுக வளாகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தொழிற்பகுதிகளில் கமிஷன் வாங்கியதாகக் கூறி பாஜகவின் மீது தானும் ஒரு குற்றப்பத்திரிகை வெளியிடுவதாகத் தெரிவித்தார்.

பாஜகவினர் திரிணமூல் காங்கிரஸ் மீது குற்றப்பத்திரிகையை வெளியிட்டார்கள். நானும் பாஜகவின் மீது குற்றப்பத்திரிகையை வெளியிடுகிறேன் என்று அவர் கூறினார்.

சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஏப்ரல் 23, ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறவிருக்கின்றன.

Summary

West Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday asserted that the TMC will return to power in the state for the fourth consecutive term, claiming that "no one wants the BJP to form government".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.