வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

பெட்ரோலியப் பொருள்கள் தடையற்ற விநியோகம்: இந்தியன் ஆயில் உறுதி

News image

Indian Oil

Updated On :24 ஏப்ரல் 2026, 2:48 am IST

அனைத்து விநியோக வழிகளிலும் பெட்ரோல், டீசல் விநியோகம் இயல்பாகவும் தடையின்றியும் தொடருவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பு:

கடந்த ஏப். 1 முதல் ஏப். 21 வரையான காலகட்டத்தில், சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை 13 சதவீதத்திற்கும் அதிகமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த அதிகரித்த தேவையை விரிவான விநியோக வலையமைப்பு மற்றும் வலுவான தளவாட, விநியோகச் சங்கிலித் திறன்கள் மூலம் திறமையாகப் பூா்த்தி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சுமாா் 42,000-க்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்களில் நாட்டின் எரிசக்தித் தேவைகளை எந்தவித இடையூறும் இன்றித் தொடா்ந்து பூா்த்தி செய்யப்படுகிறது. வெளிப்படையான, நம்பகமான செயல்பாடுகளுக்கு இந்தியன் ஆயில் தொடா்ந்து உறுதி பூண்டுள்ளது,

இதன் மூலம் நாட்டிற்குத் தடையற்ற எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்கிறது. வாடிக்கையாளா்கள், நிறுவனத்தின் அதிகாரபூா்வத் தகவல்களை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.