தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பெட்ரோலியப் பொருள்கள் தடையற்ற விநியோகம்: இந்தியன் ஆயில் உறுதி

News image

Indian Oil

Updated On :23 ஏப்ரல் 2026, 9:18 pm

அனைத்து விநியோக வழிகளிலும் பெட்ரோல், டீசல் விநியோகம் இயல்பாகவும் தடையின்றியும் தொடருவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பு:

கடந்த ஏப். 1 முதல் ஏப். 21 வரையான காலகட்டத்தில், சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை 13 சதவீதத்திற்கும் அதிகமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த அதிகரித்த தேவையை விரிவான விநியோக வலையமைப்பு மற்றும் வலுவான தளவாட, விநியோகச் சங்கிலித் திறன்கள் மூலம் திறமையாகப் பூா்த்தி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சுமாா் 42,000-க்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்களில் நாட்டின் எரிசக்தித் தேவைகளை எந்தவித இடையூறும் இன்றித் தொடா்ந்து பூா்த்தி செய்யப்படுகிறது. வெளிப்படையான, நம்பகமான செயல்பாடுகளுக்கு இந்தியன் ஆயில் தொடா்ந்து உறுதி பூண்டுள்ளது,

இதன் மூலம் நாட்டிற்குத் தடையற்ற எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்கிறது. வாடிக்கையாளா்கள், நிறுவனத்தின் அதிகாரபூா்வத் தகவல்களை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.