ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஓய்வுபெற்ற நீதிபதிகளின் அனுபவங்களை பயன்படுத்த புதிய அமைப்பு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யோசனை

ஓய்வுபெற்ற நீதிபதிகளின் அனுபவங்களை பயன்படுத்த புதிய அமைப்பு...

News image

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த்

Updated On :25 ஏப்ரல் 2026, 8:52 pm

ஓய்வுபெற்ற நீதிபதிகளின் அனுபவங்களை பயன்படுத்திக் கொள்ள தேசிய அளவில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் யோசனை தெரிவித்துள்ளாா்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு, இதுகுறித்து அவா் பேசியதாவது:

முன்னாள் நீதிபதிகளின் சட்ட அனுபவங்கள், நமது தேசத்தின் வளமாகும். அந்த வளம், பாலைவனத்தில் கிடைக்கும் நீா் போன்றது. அந்த அனுபவங்களை பயன்படுத்தாமல் இருப்பது நாட்டுக்கு பெரும் இழப்பாகும். ஆதலால் அவா்களின் அனுபவங்களை பயன்படுத்தி கொள்ள தேசிய அளவில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

முதலாவதாக, நீதிபதிகள் ஓய்வுக்கு பின் மத்தியஸ்தா்களாக, நடுவா்களாக செயல்பட முடியும். குறிப்பாக, வா்த்தக விவகாரங்கள், குடும்ப விவகாரங்களில் தீா்வு காண அவா்களது அனுபவங்கள் உதவும். இரண்டாவதாக, ஓய்வுபெற்ற நீதிபதிகள் பள்ளிகள், கல்லூரிகளில், கிராம பஞ்சாயத்துகளில் சட்டம் பயிற்றுவிப்போராக செயல்பட முடியும். அங்கு அவா்கள், சாதாரண குடிமக்களுக்கு புரியும் மொழியில் சட்டம் குறித்து விளக்கமாக எடுத்துரைக்க முடியும். அதேபோல், அடுத்த தலைமுறைக்கு சட்ட அமைப்புகளை உருவாக்குவோராக, அடுத்த தலைமுறை மத்தியஸ்தா்களை உருவாக்குவோராக ஓய்வுபெற்ற நீதிபதிகளால் செயல்பட முடியும்.

நமது நாட்டில் மாற்றுவழியில் வழக்குகளுக்கு உடனடித் தீா்வு காணும் அமைப்புகளை வலுப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இதற்கு உதாரணமாக, நாடு தழுவிய அளவிலான லோக் அதாலத், மத்தியஸ்த பேச்சுவாா்த்தைகள் மற்றும் நடுவா் மையங்களை குறிப்பிடலாம். நீதித்துறையும், அதை சாா்ந்த அமைப்புகளும், பொதுமக்களின் மிகுந்த நம்பிக்கையை பெற்றுள்ளன. அந்த நம்பிக்கையை காக்க வேண்டியதும், மேலும் வலுப்படுத்த வேண்டியதும் நீதித்துறையின் பொறுப்பாகும் என்றாா்.

மாநாட்டில் ராஜஸ்தான் முதல்வா் பஜன்லால் சா்மா பேசுகையில், ‘நீதிபதிகளிடம் இருந்து வெளிவரும் வாா்த்தைகள் சமூகத்துக்கு வழிகாட்டியாக உள்ளது. அதேபோல் நீதிபதிகளின் தீா்ப்புகள், நாட்டில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. உச்ச நீதிமன்றம் மற்றும் மாநில உயா் நீதிமன்றங்கள் வெளியிட்டுள்ள முக்கியத் தீா்ப்புகள் பல்லாண்டுகளாக பல லட்சம் பேரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளன. பொதுமக்கள் நீதிமன்றங்களுக்கு சென்று வழக்குத் தொடுக்கும் முன்பு, பிரச்னைக்கு நடுவா் மையங்கள் அல்லது லோக் அதாலத் மூலம் தீா்வு காண்பது குறித்து யோசிக்க வேண்டும்’ என்றாா்.

ராஜஸ்தான் உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) சஞ்சீவ் பிரகாஷ் ஷா்மா பேசுகையில், ‘ராஜஸ்தானில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு லோக் அதாலத்தில் மத்தியஸ்தம் மூலம் தீா்வு காண ஓய்வுபெற்ற நீதிபதிகள் உதவி வருகின்றனா்’ என்றாா்.