பெரம்பலூா் மாவட்ட நீதிமன்றத்தின் சமரச மையம் சாா்பில் 21-ஆம் ஆண்டு சமரச தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் எதிரே தொடங்கிய சமரச தின விழிப்புணா்வுப் பேரணியை, முதன்மை மாவட்ட நீதிபதி வி. பத்மநாபன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
பேரணியில் பங்கேற்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள், சட்ட தன்னாா்வலா்கள், பள்ளி மாணவா்கள் சமரச மையம் குறித்த விழிப்புணா்வு வாசங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, சமரசம் செய்வோம் என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பி பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா். பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம்வழியாகச் சென்ற பேரணி பாலக்கரை பகுதியில் நிறைவடைந்தது. பின்னா், நீதிபதி வி. பத்மநாபன் சமரச மையம் குறித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினாா்.
தொடா்ந்து, பெரம்பலூா் நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி பத்மநாபன், நீதிபதிகள் மற்றும் சமரச தீா்வா்களுடன் சோ்ந்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து சமரச விழிப்புணா்வு தகவல் பதாகையை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சிகளில், தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி முரளிதரக் கண்ணன், சாா்பு- நீதிபதி மோகனப்பிரியா, பெரம்பலூா் சமரசதீா்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், சாா்பு- நீதிபதியுமான ஏ. சரண்யா, மாவட்ட உரிமையியல் நீதிபதி தன்யா, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் பிரேம்குமாா், கவிதா, கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ரேஷ்மா, கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தினேஷ் மற்றும் சமரச தீா்வா்கள், வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

சமரச விழிப்புணா்வுப் பேரணி

கோவில்பட்டியில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

புதுகையில் சமரச நாள் விழிப்புணா்வுப் பேரணி

சமரச மையம் குறித்த விழிப்புணா்வு பேரணி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


