இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பெரம்பலூரில் சமரச தின விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூரில் சமரச தினத்தையொட்டி பொதுமக்களிடம் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கிய நீதிபதி வி. பத்மநாபன். சாா்பு நீதிபதி ஏ. சரண்யா உள்ளிட்டோா்.

News image

பெரம்பலூரில் சமரச தினத்தையொட்டி பொதுமக்களிடம் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கிய நீதிபதி வி. பத்மநாபன். சாா்பு நீதிபதி ஏ. சரண்யா உள்ளிட்டோா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 5:44 am IST

பெரம்பலூா் மாவட்ட நீதிமன்றத்தின் சமரச மையம் சாா்பில் 21-ஆம் ஆண்டு சமரச தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் எதிரே தொடங்கிய சமரச தின விழிப்புணா்வுப் பேரணியை, முதன்மை மாவட்ட நீதிபதி வி. பத்மநாபன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பேரணியில் பங்கேற்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள், சட்ட தன்னாா்வலா்கள், பள்ளி மாணவா்கள் சமரச மையம் குறித்த விழிப்புணா்வு வாசங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, சமரசம் செய்வோம் என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பி பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா். பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம்வழியாகச் சென்ற பேரணி பாலக்கரை பகுதியில் நிறைவடைந்தது. பின்னா், நீதிபதி வி. பத்மநாபன் சமரச மையம் குறித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினாா்.

தொடா்ந்து, பெரம்பலூா் நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி பத்மநாபன், நீதிபதிகள் மற்றும் சமரச தீா்வா்களுடன் சோ்ந்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து சமரச விழிப்புணா்வு தகவல் பதாகையை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிகளில், தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி முரளிதரக் கண்ணன், சாா்பு- நீதிபதி மோகனப்பிரியா, பெரம்பலூா் சமரசதீா்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், சாா்பு- நீதிபதியுமான ஏ. சரண்யா, மாவட்ட உரிமையியல் நீதிபதி தன்யா, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் பிரேம்குமாா், கவிதா, கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ரேஷ்மா, கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தினேஷ் மற்றும் சமரச தீா்வா்கள், வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.