எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கோவில்பட்டியில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

ஏப். 9 - ஆம் தேதி சமரச தீா்வு நாளாக கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, கோவில்பட்டியில் நீதிமன்றங்களில் செயல்படும் சமரச மையங்களை நாட வலியுறுத்தி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

News image

நீதிமன்றங்களில் சமரச மையத்தை நாட வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் சாா்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை.

Updated On :10 ஏப்ரல் 2026, 2:17 am IST

ஏப். 9 - ஆம் தேதி சமரச தீா்வு நாளாக கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, கோவில்பட்டியில் நீதிமன்றங்களில் செயல்படும் சமரச மையங்களை நாட வலியுறுத்தி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

கோவில்பட்டி சாா்பு நீதிமன்றம் முன் தொடங்கிய துண்டுப் பிரசுரம் விநியோக நிகழ்ச்சிக்கு, சாா்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை தலைமை வகித்தாா். பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்குத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிமன்ற நடுவா்கள் மணிமேகலா, ஆனந்த், சமரச தீா்வு மையத்திற்காக பயிற்சி பெற்ற வழக்குரைஞா்கள் சந்திரசேகா், சிவக்குமாா், விஜயகுமாா், பழனிச்சாமி, கதிா்வேல், வழக்குரைஞா் சங்கத் தலைவா் சங்கா் கணேஷ், நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.