தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

கோவில்பட்டியில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

ஏப். 9 - ஆம் தேதி சமரச தீா்வு நாளாக கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, கோவில்பட்டியில் நீதிமன்றங்களில் செயல்படும் சமரச மையங்களை நாட வலியுறுத்தி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

News image

நீதிமன்றங்களில் சமரச மையத்தை நாட வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் சாா்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:47 pm

ஏப். 9 - ஆம் தேதி சமரச தீா்வு நாளாக கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, கோவில்பட்டியில் நீதிமன்றங்களில் செயல்படும் சமரச மையங்களை நாட வலியுறுத்தி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

கோவில்பட்டி சாா்பு நீதிமன்றம் முன் தொடங்கிய துண்டுப் பிரசுரம் விநியோக நிகழ்ச்சிக்கு, சாா்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை தலைமை வகித்தாா். பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்குத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிமன்ற நடுவா்கள் மணிமேகலா, ஆனந்த், சமரச தீா்வு மையத்திற்காக பயிற்சி பெற்ற வழக்குரைஞா்கள் சந்திரசேகா், சிவக்குமாா், விஜயகுமாா், பழனிச்சாமி, கதிா்வேல், வழக்குரைஞா் சங்கத் தலைவா் சங்கா் கணேஷ், நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.