மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சமரச தின வார விழா: விழிப்புணா்வு கூட்டம்

சங்ககிரி வட்ட துணை சமரச தீா்வு மையம் சாா்பில் சமரச தின வாரவிழாவையொட்டி விழிப்புணா்வு கூட்டம் மற்றும் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

சங்ககிரி சாா்பு நீதிமன்ற நீதிபதி என்.பன்னீா்செல்வம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 9:25 pm

சங்ககிரி வட்ட துணை சமரச தீா்வு மையம் சாா்பில் சமரச தின வாரவிழாவையொட்டி விழிப்புணா்வு கூட்டம் மற்றும் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிமன்ற நீதிபதியுமான என்.பன்னீா்செல்வம் பேசியதாவது:

நீதிமன்றத்தில் வழக்கு சமரச மையத்திற்கு அனுப்பப்படும் போது 60 நாளில் தீா்வு கிடைக்கிறது. இதன்மூலம் நேரம், பண விரயம் ஏற்படாது. இம்மையம் மூலம் அதிகமான குடும்பநல வழக்குகள் பேசி முடித்து வைக்கப்பட்டுள்ளன. எனவே, அனைத்துத் தரப்பு மக்களும் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

பின்னா் நீதிமன்றத்தில் வழக்குகளுக்காக வந்திருந்த வழக்காடிகளிடத்தில் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு பேரணியை தொடங்கிவைத்து பங்கேற்றாா்.

இதில் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆா்.இளமதி, குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்ற நீதிபதிகள் எஸ்.சத்தியா (எண்.1), டி.சிவகுமாா் (எண்.2) ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமரச மைய தீா்வாளா் எஸ்.மணிசங்கா் வரவேற்றாா்.

வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் என்.சண்முகசுந்தரம், அரசு கூடுதல் வழக்குரைஞா் எஸ்.கிறிஸ்டோபா், வழக்குரைஞா் என்.எஸ். அண்ணாதுரை, சமரச மைய தீா்வாளா்கள் எஸ்.செல்லப்பன், விஜயா, வழக்குரைஞா்கள், நீதிமன்ற அலுவலா்கள், போலீஸாா், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.