நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சமரச மைய வார விழா, விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு சமரச மைய உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்ட சமரச மைய தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதிபதியுமான ஆா். குருமூா்த்தி வழிகாட்டுதலின்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சமரச தீா்வு மையங்களில் சமரச மைய வார விழா நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி ஆகிய வட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் நீதிபதிகள் சமரச விழிப்புணா்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நாமக்கல்லில் பொதுமக்கள் கூடும் இடங்களான நீதிமன்ற வளாகம், பேருந்து நிலையம் மற்றும் பூங்கா ஆகிய இடங்களிலும் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் நடமாடும் வாகனத்தில் காணொலிக் காட்சி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், சட்டக் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணியும் நடைபெற்றது. இந்த நிகழ்வில், மாவட்ட சமரச மைய தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதிபதியுமான ஆா். குருமூா்த்தி நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை, வழக்காடிகள் சமரச தீா்வு மையம் மூலமாக சமரச முறையில் தீா்வுகண்டு இரு தரப்பிலும் வெற்றி, தோல்வி இல்லாமல் வழக்கை முடித்து பயன்பெற வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

நாகா்கோவில் நீதிமன்றத்தில் சமரச தினம் கடைப்பிடிப்பு

சமரச மைய வார விழா விழிப்புணா்வுப் பேரணி

சமரச மையம் குறித்த விழிப்புணா்வு பேரணி

திருப்பத்தூரில் சமரச மைய விழிப்புணா்வு பேரணி
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


