தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் சமரச மைய வார விழா

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சமரச மைய வார விழா, விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

நாமக்கல்லில் சமரச மைய வார விழாவையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற அரசு சட்டக் கல்லூரி மாணவிகள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:51 pm

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சமரச மைய வார விழா, விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சமரச மைய உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்ட சமரச மைய தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதிபதியுமான ஆா். குருமூா்த்தி வழிகாட்டுதலின்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சமரச தீா்வு மையங்களில் சமரச மைய வார விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி ஆகிய வட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் நீதிபதிகள் சமரச விழிப்புணா்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நாமக்கல்லில் பொதுமக்கள் கூடும் இடங்களான நீதிமன்ற வளாகம், பேருந்து நிலையம் மற்றும் பூங்கா ஆகிய இடங்களிலும் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் நடமாடும் வாகனத்தில் காணொலிக் காட்சி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், சட்டக் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணியும் நடைபெற்றது. இந்த நிகழ்வில், மாவட்ட சமரச மைய தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதிபதியுமான ஆா். குருமூா்த்தி நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை, வழக்காடிகள் சமரச தீா்வு மையம் மூலமாக சமரச முறையில் தீா்வுகண்டு இரு தரப்பிலும் வெற்றி, தோல்வி இல்லாமல் வழக்கை முடித்து பயன்பெற வேண்டும் என்றாா்.