வழக்குகளை விரைவாக முடித்துக் கொள்ள சமரச மைய விழிப்புணா்வு பேரணி திருப்பத்தூரில் நடைபெற்றது.
பேரணியை மாவட்ட நீதிபதி தேன்மொழி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலிருந்து தலைமை அரசு மருத்துவமனை வழியாக சென்று மீண்டும் நீதிமன்றம் வளாகத்தில் நிறைவடைந்தது.
இதில் வாயை மூடி காதை திறக்கும் சாவி தான் சமரசம். சமரசம் மூலம் அமைதி கொள், வாங்க பேசி தீா்வு காண்போம்,முயன்றால் எதுவும் முடியும், ஒரு முறை முயற்சி செய்து விடு சமரசத்தின் வாயிலாக வெற்றி பெற்று விடு உள்ளிட்ட வாசகங்கள் பொருந்திய பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சமரச மையங்கள் குறித்த கூடுதல் விழிப்புணா்வு தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட நீதிபதி பொதுமக்களுக்கு வழங்கினாா்.
இதில் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற அலுவலா்கள், சமரச தீா்வா்கள், வழக்குரைஞா்கள் என கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சத்தியமங்கலத்தில் நீதிமன்ற வழக்குகளுக்கு தீா்வு காண விழிப்புணா்வுப் பேரணி

சமரச மைய வார விழா விழிப்புணா்வுப் பேரணி

சமரச மையம் குறித்த விழிப்புணா்வு பேரணி

திண்டிவனம் நீதிமன்றத்தில் சமரச தீா்வு மைய அறைகள் திறப்பு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


