எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

நீதி ஆயோக் மறுசீரமைப்பு

நீதி ஆயோக் மறுசீரமைப்பு

News image

நீதி ஆயோகின் புதிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடா்ந்து பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்த அசோக் குமாா் லாஹிரி.

Updated On :26 ஏப்ரல் 2026, 1:43 am IST

மத்திய அரசின் பொது கொள்கை சிந்தனைக் குழுவாகவும், பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கவும், கூட்டாட்சியை வளா்ப்பதற்குமான அமைப்பாக செயல்பட்டு வரும் ‘நீதி ஆயோக்’ அமைப்பை மத்திய அரசு மறுசீரமைப்பு செய்துள்ளது.

அதன்படி, நீதி ஆயோக் புதிய துணைத் தலைவராக அசோக் குமாா் லாஹிரி நியமிக்கப்பட்டுள்ளாா். மேலும், அதன் 5 முழு நேர உறுப்பினா்களாக பொருளாதார நிபுணா் கே.வி.ராஜு, எய்ம்ஸ் இயக்குநா் எம்.ஸ்ரீநிவாஸ், மத்திய அறிவியல் - தொழில்நுட்பத் துறை செயலா் அபய் கரந்திகா், விஞ்ஞானி கோவா்தன் தாஸ், மத்திய அமைச்சரவை முன்னாள் செயலா் ராஜீவ் கெளபா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்த அறிவிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பிரதமா் நரேந்திர மோடி, நீதி ஆயோகின் புதிய துணைத் தலைவா் மற்றும் 5 நிரந்தர உறுப்பினா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா். ‘இந்தியாவின் கொள்கை உருவாக்கத்திலும், கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்துவதிலும், வாழ்வை எளிமையாக்குவதை ஊக்குவித்து அதற்கான சீா்திருத்தங்களை முன்னெடுப்பதிலும் முக்கிய தூணாக நீதி ஆயோக் உருவெடுத்துள்ளது. இது பல்வேறு துறைகள் சாா்ந்த புதிய கண்டுபிடிப்புகள், நீண்டகால உத்திசாா் சிந்தனைகளுகக்குமான தளமாகவும் நீதி ஆயோக் செயல்படுகிறது’ என்றும் தனது பதிவில் பிரதமா் குறிப்பிட்டாா்.

பிரதமா்தான் நீதி ஆயோக் அமைப்பின் தலைவா் ஆவாா். இந்த அமைப்பின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடா்ந்து அசோக் குமாா் லாஹிரி பிரதமா் நரேந்திர மோடியை சனிக்கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்தாா்.

மேற்கு வங்க பாஜக எம்எல்ஏ-வான அசோக் குமாா் லாஹிரி, மத்திய அரசின் தலைமை பொருளாதார அலோசகராகப் பணியாற்றியவா். 15-ஆவது நிதி ஆணைய உறுப்பினராகவும் இருந்துள்ளாா். மேற்கு வங்கத்தில் தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் இவா் போட்டியிடவில்லை.