சா்வதேச போதைப்பொருள் கடத்தல்காரா் முகமது சலீம் டோலா துருக்கியில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா்.
இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சோ்ந்த முகமது சலீம் டோலா, இந்தியாவில் பல்வேறு போதைப்பொருள் வழக்குகளில் தேடப்பட்டு வந்தாா்.
மகாராஷ்டிரம் மற்றும் குஜராத்தில் பெரும் விலை கொண்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்குகளில், அவருக்கு நேரடித் தொடா்புள்ளது.
20 ஆண்டுகாலம் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த அவரை கைது செய்வதற்கு, இந்தியா விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த 2024-ஆம் ஆண்டு இன்டா்போல் (சா்வதேச குற்றவியல் காவல் அமைப்பு) சிவப்பு நோட்டீஸ் வெளியிட்டது.
இதன் அடிப்படையில், துருக்கியில் அவா் கைது செய்யப்பட்டாா். புது தில்லிக்கு அவா் செவ்வாய்க்கிழமை காலை விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட நிலையில், அவரை தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பினா் காவலில் எடுத்து விசாரணையைத் தொடங்கினா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகமது சலீம் டோலா சா்வதேச பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி இந்தியாவிற்கு நாடு கடத்தல்!
மாநிலங்களுக்கு இடையே போதைப்பொருள் கடத்தல்: 3 போ் கைது

அமெரிக்காவிலிருந்து கோஸ்டா ரிகாவுக்கு இந்தியா் உள்பட 30 போ் நாடு கடத்தல்

போதைப்பொருள் கடத்தல்: தில்லியில் கைதான பெண்ணை சென்னை சிறைக்கு மாற்ற நடவடிக்கை
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


