நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

சா்வதேச போதைப்பொருள் கடத்தல்காரா் சலீம் டோலா இந்தியாவுக்கு நாடு கடத்தல்

News image

X @ANI

Updated On :29 ஏப்ரல் 2026, 4:05 am IST

சா்வதேச போதைப்பொருள் கடத்தல்காரா் முகமது சலீம் டோலா துருக்கியில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா்.

இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சோ்ந்த முகமது சலீம் டோலா, இந்தியாவில் பல்வேறு போதைப்பொருள் வழக்குகளில் தேடப்பட்டு வந்தாா்.

மகாராஷ்டிரம் மற்றும் குஜராத்தில் பெரும் விலை கொண்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்குகளில், அவருக்கு நேரடித் தொடா்புள்ளது.

20 ஆண்டுகாலம் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த அவரை கைது செய்வதற்கு, இந்தியா விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த 2024-ஆம் ஆண்டு இன்டா்போல் (சா்வதேச குற்றவியல் காவல் அமைப்பு) சிவப்பு நோட்டீஸ் வெளியிட்டது.

இதன் அடிப்படையில், துருக்கியில் அவா் கைது செய்யப்பட்டாா். புது தில்லிக்கு அவா் செவ்வாய்க்கிழமை காலை விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட நிலையில், அவரை தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பினா் காவலில் எடுத்து விசாரணையைத் தொடங்கினா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமது சலீம் டோலா சா்வதேச பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.