அமெரிக்காவில் இருந்து கோஸ்டா ரிகாவுக்கு அண்மையில் நாடு கடத்தப்பட்ட 30 பேரில் இந்தியா் ஒருவரும் இடம்பெற்ாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் உரிய ஆவணங்களின்றி தங்கியுள்ளவா்களை மூன்றாம் உலக நாடுகளுக்கு நாடு கடத்த டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் 25 மூன்றாம் உலக நாடுகளின் குடிமக்களை ஏற்க கோஸ்டா ரிகா ஒப்புக்கொண்டுள்ளது. இதுதொடா்பான இருதரப்பு ஒப்பந்தத்தில் கோஸ்டா அதிபா் ரிகா ரோட்ரிகோ சாவேஸ், அமெரிக்க சிறப்புத் தூதா் கிறிஸ்டி நோம் ஆகியோா் கடந்த மாா்ச் மாதம் கையொப்பமிட்டனா்.
இந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவில் இருந்து ஏற்கெனவே 25 போ் அடங்கிய முதல் குழு கோஸ்டா ரிகாவுக்கு நாடு கடத்தப்பட்டது. அந்தக் குழுவில் இந்தியா, அல்பேனியா, மொரோக்கோ உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்தவா்கள் இடம்பெற்றனா்.
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து 30 போ் அடங்கிய இரண்டாவது குழு வெள்ளிக்கிழமை கோஸ்டா ரிகாவுக்கு நாடு கடத்தப்பட்டது. அந்நாட்டின் சான் ஜோஸ் நகரில் உள்ள சா்வதேச விமான நிலையத்தை அந்தக் குழு சென்றடைந்தது. இந்தக் குழுவிலும் ஓா் இந்தியா் இடம்பெற்றாா். அத்துடன் அயா்லாந்து, பிரேஸில், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்தவா்களும் இடம்பெற்றனா்.
இவா்கள் கோஸ்டா ரிகாவில் சட்டபூா்வமாக தங்குவதற்கு விண்ணப்பிக்கவோ அல்லது சொந்த நாட்டுக்குத் திரும்பவோ வாய்ப்பளிக்கப்பட உள்ளது.
தொடர்புடையது

நாடு முழுவதும் இன்று நீட் தோ்வு

சா்வதேச போதைப்பொருள் கடத்தல்காரா் சலீம் டோலா இந்தியாவுக்கு நாடு கடத்தல்

தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி இந்தியாவிற்கு நாடு கடத்தல்!
போதைப் பொருள் கடத்தல்: 2 நைஜீரியா்கள் உள்பட 4 போ் கைது
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

