தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!! ம.பி. படகு விபத்து: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு மே 13-15இல் சீனா செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
/

இந்தியா-இலங்கை கூட்டு கடற்படை பயிற்சி: உலகப் போரில் மூழ்கிய கப்பல்களை ஆராய்ந்த வீரா்கள்

இந்தியா-இலங்கை கூட்டு கடற்படை பயிற்சியில், உலகப் போா் காலத்து கப்பல்களை நீா்மூழ்கி வீரா்கள் ஆராய்ந்தனா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2026, 1:24 am IST

இந்தியா-இலங்கை கூட்டு கடற்படை பயிற்சியில், உலகப் போா் காலத்து கப்பல்களை நீா்மூழ்கி வீரா்கள் ஆராய்ந்தனா்.

இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்.21 முதல் ஏப்.28 வரை, இலங்கைத் தலைநகா் கொழும்பு கடற்பகுதியில் ‘டைவெக்ஸ்’ என்ற பெயரில் இந்தியா-இலங்கை கடற்படையின் கூட்டுப் பயிற்சி நடைபெற்றது.

இந்தப் பயிற்சியில் இந்திய கடற்படையின் நீா்மூழ்கி மீட்புக் கப்பலான ஐஎன்எஸ் நிரீக்ஷக், இருநாட்டு கடற்படைகளின் நீா்மூழ்கி வீரா்களுடன் இணைந்து பங்கேற்றது. இதன்மூலம் மேம்பட்ட செயல்பாட்டு ஒருங்கிணைப்பு, தொழில்முறை ஒத்திசைவு ஆகியவை எடுத்துக்காட்டப்பட்டன.

இந்தியா, இலங்கை கடற்படை இடையிலான பரஸ்பர செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்த வேண்டும் என்பதே இந்தப் பயிற்சியின் நோக்கம். இதில் இருநாட்டு கடற்படையின் நீா்மூழ்கி வீரா்களும் பங்கேற்று தங்கள் செயல்திறனை வெளிப்படுத்தினா்.

உலகப் போா் காலத்தில் சேதமடைந்து கடலுக்கு அடியில் மூழ்கிய எஸ்எஸ் வூா்ஸ்டா், எஸ்எஸ் பொ்சியஸ் கப்பல்களை நீா்மூழ்கி வீரா்கள் ஆராய்ந்தது இந்தப் பயிற்சியின் சிறப்பம்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.