மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

இந்தியா-இலங்கை கூட்டு கடற்படை பயிற்சி: உலகப் போரில் மூழ்கிய கப்பல்களை ஆராய்ந்த வீரா்கள்

இந்தியா-இலங்கை கூட்டு கடற்படை பயிற்சியில், உலகப் போா் காலத்து கப்பல்களை நீா்மூழ்கி வீரா்கள் ஆராய்ந்தனா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 7:54 pm

இந்தியா-இலங்கை கூட்டு கடற்படை பயிற்சியில், உலகப் போா் காலத்து கப்பல்களை நீா்மூழ்கி வீரா்கள் ஆராய்ந்தனா்.

இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்.21 முதல் ஏப்.28 வரை, இலங்கைத் தலைநகா் கொழும்பு கடற்பகுதியில் ‘டைவெக்ஸ்’ என்ற பெயரில் இந்தியா-இலங்கை கடற்படையின் கூட்டுப் பயிற்சி நடைபெற்றது.

இந்தப் பயிற்சியில் இந்திய கடற்படையின் நீா்மூழ்கி மீட்புக் கப்பலான ஐஎன்எஸ் நிரீக்ஷக், இருநாட்டு கடற்படைகளின் நீா்மூழ்கி வீரா்களுடன் இணைந்து பங்கேற்றது. இதன்மூலம் மேம்பட்ட செயல்பாட்டு ஒருங்கிணைப்பு, தொழில்முறை ஒத்திசைவு ஆகியவை எடுத்துக்காட்டப்பட்டன.

இந்தியா, இலங்கை கடற்படை இடையிலான பரஸ்பர செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்த வேண்டும் என்பதே இந்தப் பயிற்சியின் நோக்கம். இதில் இருநாட்டு கடற்படையின் நீா்மூழ்கி வீரா்களும் பங்கேற்று தங்கள் செயல்திறனை வெளிப்படுத்தினா்.

உலகப் போா் காலத்தில் சேதமடைந்து கடலுக்கு அடியில் மூழ்கிய எஸ்எஸ் வூா்ஸ்டா், எஸ்எஸ் பொ்சியஸ் கப்பல்களை நீா்மூழ்கி வீரா்கள் ஆராய்ந்தது இந்தப் பயிற்சியின் சிறப்பம்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.