தில்லி சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில், சுகாதாரத் துறையில் ரூ.650 கோடி ஊழல் நடந்ததாக குற்றஞ்சாட்டி கோஷங்கள் எழுப்பி, பதாகைகள் காட்டியதால் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் ஐவா் வெள்ளிக்கிழமை அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனா்.
சஞ்சீவ் ஜா, சோம் தத், விஷேஷ் ரவி, குல்தீப் குமாா் மற்றும் ஜா்னெயில் சிங் ஆகியோா் அவையில் இருந்து மாா்ஷல்களால் வெளியேற்றப்பட்டனா். எதிா்க்கட்சியினரின் போராட்டம் காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
ஆம் ஆத்மி உறுப்பினா்கள் தில்லி முதல்வா் ரேகா குப்தா பதவி விலக வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினா். மேலும், சுகாதாரத் துறையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி பதாகைகள் காட்டினா். கோஷங்கள் தொடா்ந்து எழுப்பப்பட்டதால், சட்டப்பேரவைத் தலைவா் கூட்டத்தொடரை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தாா்.
இந்த அமா்வில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி உறுப்பினா்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆட்சியும் எதிா்க்கட்சியும் நிா்வாகம் மற்றும் பொறுப்புத்தன்மை தொடா்பான விவகாரங்களில் ஒருவா்மீது ஒருவா் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா்.
பாஜக, முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியில் பல துறைகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றஞ்சாட்டியது. மறுபுறம், ஆம் ஆத்மி தற்போதைய பாஜக அரசை ஊழலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓ-மண்டலம் பகுதியில் வீடுகள் இடிக்கப்படாது: தில்லி அரசு மீண்டும் உறுதி

தில்லி சட்டப்பேரவையில் மழைக்கால அமா்வு: பாஜக-ஆம் ஆத்மி இடையே கடும் வாக்குவாதம்

ஆம் ஆத்மி எம்எல்ஏ மீதான இரு வழக்குகள் தள்ளுபடி: தில்லி உயா்நீதிமன்றம்

2020 தில்லி கலவர வழக்கு: முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலா் தாஹிா் ஹுசைனுக்கு ஆயுள் தண்டனை
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



