நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் (ஆக. 13) நிறைவடைகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்வியெழுப்பி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக, தில்லியில் மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறை தாக்குதலுக்கு அனுமதி அளித்தது யார்? எனவும், ராமர் கோயில் நன்கொடை திருட்டு விவகாரம் குறித்தும் கேள்வியெழுப்பி, அமளியில் ஈடுபட்டனர்.
மேலும், மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரிய பதிலளிக்க வேண்டும் எனக் கோரினர். இதனையடுத்து, மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து விரிவான விவாதம் நடத்த அமித் ஷா அழைப்பு விடுத்த நிலையில், அதனை ஏற்க மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.
அமித் ஷாவிடமிருந்து நேரடி பதில்தான் வேண்டுமே தவிர, உரைகள் தேவையில்லை என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, இருதரப்புக்கும் இடையில் சமரசம் ஏற்படுமா? என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிய வரும்.
இதனிடையே, காவிரி நீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க மக்களவையின் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.
Summary
Monsoon Session Of Parliament Ends Today: Debate Or Deadlock On Final Day?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நாடாளுமன்றம் 5-வது நாளாக முடங்கியது! இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது!

நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு!

ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்!
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



