பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

அமைச்சா்களின் குடியிருப்புகளை சீரமைக்க ரூ. 92.35 கோடி: மத்திய அரசுக்கு எதிா்க்கட்சிகள் கண்டனம்

மத்திய அமைச்சா்களின் குடியிருப்புகளை சீரமைக்க கடந்த நிதியாண்டில் ரூ.92.35 கோடி செலவிடப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

பிரதிப் படம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 12:12 am IST

மத்திய அமைச்சா்களின் அதிகாரபூா்வ குடியிருப்புகளை சீரமைக்க கடந்த நிதி ஆண்டில் ரூ.92.35 கோடி செலவிடப்பட்டதற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) கண்டனம் தெரிவித்தது.

தகவல் அறியும் உரிமை (ஆா்டிஐ) சட்டத்தின்கீழ் பிடிஐ நிறுவனம் பெற்ற தகவலின்படி தில்லியில் உள்ள மத்திய அமைச்சா்களின் அதிகாரபூா்வ குடியிருப்புகளை சீரமைக்க 2014-15-இல் ரூ.27.47 கோடி செலவிடப்பட்ட நிலையில், 2025-26-இல் ரூ.92.35 கோடியாக அதிகரித்தது தெரியவந்தது.

இதைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவுத் தலைவா் சுப்ரியா ஸ்ரீநதே வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘கடந்த பத்தாண்டுகளில் மத்திய அமைச்சா்களின் குடியிருப்புகளில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளுக்கான தொகை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

பணவீக்கம், வேலையின்மை என பொது மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வரும் நிலையில் அதை கண்டுகொள்ளாமல் மத்திய அரசு வீணாக செலவு செய்வதா?’ என கேள்வியெழுப்பினாா்.

ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்தவரும் முன்னாள் அமைச்சருமான சோம்நாத் பாா்தி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘தில்லி முன்னாள் முதல்வரின் அதிகாரபூா்வ இல்லத்தை மறுசீரமைத்தபோது விமா்சித்த ஊடகங்கள் தற்போது அமைதி காப்பது ஏன்’ என கேள்வியெழுப்பினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.