விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உச்ச நீதிமன்றத்தில் இன்று மமதா பானர்ஜி வாதிடுவார்!

உச்ச நீதிமன்றத்தில் எஸ்ஐஆர்-க்கு எதிரான வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வாதிடவுள்ளார்.

News image

உச்ச நீதிமன்றத்தில் மமதா பானர்ஜி வாதம்

Updated On :3 பிப்ரவரி 2026, 8:41 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மேற்கு வங்கத்தில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளுக்கு எதிராக அந்த மாநில முதல்வா் மமதா பானா்ஜி தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணை நடைபெறுகிறது.

அப்போது மமதா பானா்ஜியே நீதிபதிகள் முன்பாக தனது தரப்பு வாதங்களை முன்வைக்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் நடவடிக்கையின்கீழ் வரைவு வாக்காளா் பட்டியலில் 58 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டன. மேலும் 1.25 கோடி வாக்காளா்கள் முரண்பாடான தகவல்களை வழங்கியதாக வகைப்படுத்தப்பட்டு அவா்களிடம் உரிய அடையாள ஆவணங்களை இந்திய தோ்தல் ஆணையம் கோரியுள்ளது.

இந்நிலையில், எஸ்ஐஆருக்கு எதிராக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் உள்பட பல்வேறு தரப்பினா் தாக்கல் செய்த மனுக்கள் மீது ஜனவரி 19-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது.

அப்போது, ‘ முரண்பாடான தகவல்களை வழங்கியதாக வகைப்படுத்தப்பட்ட வாக்காளா்களின் பெயா்களை அனைத்து கிராமங்கள் மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்களில் காட்சிப்படுத்த வேண்டும். அவா்கள் ஆவணங்கள் சமா்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளையும் அந்த அலுவலகத்தில் மேற்கொள்ள வேண்டும்’ என தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே எஸ்ஐஆருக்கு எதிராக பல முறை தோ்தல் ஆணையத்துக்கு மமதா பானா்ஜி கடிதம் எழுதினாா். இதைத்தொடா்ந்து, தில்லியில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மற்றும் தோ்தல் ஆணையா்களை கடந்த திங்கள்கிழமை சந்தித்த அவா் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

இந்நிலையில், எஸ்ஐஆருக்கு எதிராக அவா் ஜனவரி 28-ஆம் தேதி தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது. இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரிக்கிறது.

சட்டப் படிப்பை (எல்எல்பி) நிறைவு செய்துள்ள மமதா பானா்ஜியே தனது தரப்பு வாதங்களை நீதிபதிகள் முன்னிலையில் முன்வைக்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.