

புது தில்லி : மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைப் பேசவிடாமல் திட்டமிட்டே அரசுக்கு ஆதரவாக மக்களவைத் தலைவர் செயல்பட்டதாக அவரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மீதான விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்று திங்கள்கிழமை(பிப். 2) உரையாற்றினா். இன்றும் அந்த விவாதம் தொடர்ந்தது. அப்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச அனுமதிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், ‘மக்களவையில் இன்று(பிப். 3) பேசுவதற்கான எமது ஜனநாயக உரிமை நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
மக்களவையின் ஒவ்வொரு உறுப்பினருக்குமான உரிமைகளைப் பாதுகாப்பது, மக்களவைத் தலைவரின் அரசமைப்பு மற்றும் நாடாளுமன்றக் கடமைகளுள் ஒன்று. ஆனால், நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக, மக்களவைத் தலைவர் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு குடியரசுத் தலைவரின் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவரைப் பேசவிடாமல் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்.
தேசப் பாதுகாப்பு மீதான விவகாரத்தில் என்னைப் பேசவிடமல் செய்ய திட்டமிட்டு முயற்சி நடந்துள்ளது, மக்களவையில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் நிராகரிப்படுகின்றன. இந்தச் செயல், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். இதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பை நான் பதிவு செய்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.