உச்ச நீதிமன்றத்தில் நாளை மமதா பானர்ஜி வாதிடுவார்!

உச்ச நீதிமன்றத்தில் எஸ்ஐஆர்-க்கு எதிரான வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வாதிடவுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிகோப்புப் படம்
Updated on
1 min read

உச்ச நீதிமன்றத்தில் எஸ்ஐஆர்-க்கு எதிரான வழக்கு விசாரணையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி நாளை வாதிடவுள்ளார்.

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) எதிரான நாளைய (பிப். 4) வழக்கு விசாரணையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் மமதா பானர்ஜியே வழக்குரைஞராக ஆஜராகவுள்ளார்.

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) மாநில முதல்வர் மமதா பானர்ஜி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். எஸ்ஐஆர் பணிகளில் குளறுபடி இருப்பதாகவும் மத்திய பாஜக அரசு மீது குற்றம் சாட்டி வருகிறார்.

இதனிடையே, எஸ்ஐஆர்-க்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஜன. 28 ஆம் தேதியில் மனுத் தாக்கலும் செய்தார்.

இந்த வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கவுள்ள நிலையில், வழக்கில் மமதா பானர்ஜியே வழக்குரைஞராக ஆஜராகவுள்ளார். முதல்வரே வழக்கு விசாரணையில் வழக்குரைஞராக ஆஜராவது வரலாற்றிலேயே இதுவே முதல்முறை.

மாநிலத்தில் எஸ்ஐஆர் தொடர்பான மற்ற வழக்குகளுடன் சேர்த்து மமதா பானர்ஜியின் மனுவும் விசாரிக்கப்படலாம்.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி
மக்களவையில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் நிராகரிப்பு: மக்களவைத் தலைவருக்கு ராகுல் கடிதம்!
Summary

Mamata Banerjee will argue in the Supreme Court tomorrow!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com