தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல் இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

பிரபல இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் காலமானார்!

மலையாள திரையுலகின் மூத்த இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் காலமானார்...

News image

இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் - படம் - எக்ஸ்

Updated On :3 பிப்ரவரி 2026, 5:48 pm IST

மலையாள திரையுலகின் மூத்த இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் காலமானார்.

மலையாள திரையுலகின் மூத்த இசையமைப்பாளரான சங்கீதராஜன் என்று அழைக்கப்படும் எஸ்.பி. வெங்கடேஷ் (வயது 70) மாரடைப்பால் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று (ஜன. 3) காலமானார்.

கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான “ஜானகீய கோதாதி” எனும் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான எஸ்.பி. வெங்கடேஷ், மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் வங்கம் ஆகிய மொழிகளில் வெளியான ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

பல்வேறு ஹிட் பாடல்களை வழங்கியுள்ள எஸ்.பி. வெங்கடேஷ் மூத்த நடிகர்களான மம்மூட்டி, மோகன் லால் ஆகியோருடன் இணைந்து திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில், இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Summary

Veteran Malayalam film music composer S.P. Venkatesh has passed away.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.