வரி குறைப்பு! அமெரிக்க வெளியுறவு அமைச்சரை சந்திக்கிறார் ஜெய்சங்கர்!
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (பிப். 3) நேரில் சந்திக்கவுள்ளார்.
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறைப் பயணமாகக் கடந்த திங்களன்று (பிப். 2) அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். வரும் பிப்.4 வரையிலான அவரது இந்தப் பயணத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான முக்கிய பேச்சுவார்த்தைகளை அவர் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இன்று மதியம் நேரில் சந்தித்து உரையாடவுள்ளார். மேலும், முக்கிய கனிமங்கள் குறித்த அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்பதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் வழங்கியதுடன், இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 25 சதவீகித வரியை 18 ஆகக் குறைத்துள்ளார். இந்தச் சூழலில், அமெரிக்க மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.
External Affairs Minister Jaishankar will meet with US Secretary of State Marco Rubio in person today (Feb. 3).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

