முக்கியமான நேரத்தில் இந்திய ராணுவத்தை கைவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி கோழைத்தனமாகப் பின்வாங்கியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா விமர்சித்துள்ளார்.
இந்திய எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியபோது, பதிலடி கொடுப்பதற்கான அனுமதியை மத்திய அரசு தாமதப்படுத்தியதாக முன்னாள் ராணுவத் தளபதி எம்எம் நரவணே எழுதியிருக்கும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசிய நிலையில், இந்தப் பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பவன் கேரா தெரிவித்திருப்பதாவது:
”ராணுவத்திற்குத் தெளிவு, ஆதரவு மற்றும் அரசியல் உறுதிப்பாடு தேவைப்பட்டபோது, நரேந்திர மோடி கோழைத்தனமாகப் பின்வாங்கி இருக்கிறார்.
சீனாவுடனான நேரடி ராணுவ மோதலின்போது அவர் நமது ராணுவத்தைக் கைவிட்டார். மேலும் மிகவும் முக்கியமான நேரத்தில் அரசியல் தலைமை இல்லாத நிலையில் நாட்டை விட்டுவிட்டார்.
அந்த 56 அங்குல மார்பு 'நாடகம்' முடிந்துவிட்டது. நரேந்திர சரண்டர் மோடி ஒரு கோழை” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
Modi abandoned the army and retreated cowardly! - Pawan Khera
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பவன் கேரா 2-வது நாளாக அஸ்ஸாம் குற்றப்பிரிவு முன் ஆஜர்!

பவன் கேராவுக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பவன் கேரா சிங்கமல்ல... நனைந்த பூனை: பாஜக விமர்சனம்!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike





