கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சி வாபஸ்!

மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு...

News image

IANS

Updated On :4 பிப்ரவரி 2026, 11:11 am

இணையதளச் செய்திப் பிரிவு

மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று(பிப். 4) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக (2023 -25) அங்கு பதற்ற சூழ்நிலை நிலவியது. இதில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். எனினும் அங்கு அவ்வப்போது வன்முறை ஏற்பட்டு வருகிறது.

இந்த தொடர் வன்முறைக்கு பொறுப்பேற்று 2 ஆண்டுகளுக்குப் பிறகு, 2025 பிப். 9 அன்று பிரேன் சிங் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. முதலில் 6 மாதங்கள் குடியரசுத்தலைவர் ஆட்சி இருந்த நிலையில், மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் ஆட்சி வரும் பிப்.12 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் ஆளுநர் அஜய்குமார் பல்லாவைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது பாஜக.

புது தில்லியில்  உள்ள பாஜக தலைமையகத்தில் மணிப்பூர் பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவராக யும்நாம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர் மணிப்பூரின் புதிய முதல்வராக இன்று(பிப். 4) மாலை பதவியேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாஜகவினர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.