

மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் பலியாகினர்.
மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் நிலக்கரிச் சுரங்கத்தில் இன்று (பிப். 5) காலை வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த நிலையில், விபத்தில் 16 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, சுரங்கத்தினுள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து, மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநிலத்தில் சட்டவிரோதச் சுரங்கங்கள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் சுரங்கத்தின் உரிமையாளர் அல்லது நடத்துபவர் குறித்த தகவல்களைக் கண்டறிய போலீஸார் முயற்சித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.