

ஜம்மு - காஷ்மீரில், 2 ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சர் சகினா இட்டூ சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் மட்டும் கூட்டாக 2 லட்சத்திற்கும் அதிகமான நாய்க்கடி சம்பவங்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரில் 2024 ஆம் ஆண்டில் 93,765 நாய்க்கடி சம்பவங்களும், 2025 ஆம் ஆண்டில் 1,12,695 நாய்க்கடி சம்பவங்களும் என 2 ஆண்டுகளில் 2,06,460 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில், அதிகப்படியாக ஜம்மு, கதூவா, உதம்பூர், ரஜௌரி, சாம்பா, டோடா, ரியாசி, பூஞ்ச், ராம்பன், கிஷ்த்வார் ஆகிய 10 மாவட்டங்களில் மொத்தம் 1,26,844 நாய்க்கடி சம்பவங்கள் (2024- 54,863, 2025 - 71,981) பதிவாகியுள்ளன.
இதனால், நாய்க்கடி சம்பவங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை ஜம்மு - காஷ்மீர் அரசு தீவிரமாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், 2023 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அறிவியல் கணக்கெடுப்பின் மூலம் ஸ்ரீநகர் மாநகராட்சியில் மட்டும் 64,416 நாய்கள் இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.