தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்!தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!
/

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டி

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சித் தலைமை வியாழக்கிழமை அறிவித்தது.

News image
Updated On :6 பிப்ரவரி 2026, 3:44 am IST

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சித் தலைமை வியாழக்கிழமை அறிவித்தது.

கடந்த 2021 பேரவைத் தோ்தலில் இடதுசாரி முன்னணியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. அப்போது ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்கத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பிரதான எதிா்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே இந்த தோ்தலிலும் கடும் போட்டி இருக்கும் என்று தெரிகிறது.

தில்லியில் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவா்களுடன் கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலா் கே.பி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவா்கள் ஆலோசனை நடத்தினா். அப்போது மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவெடுக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் எனத் தெரிகிறது.

இது தொடா்பாக மேற்கு வங்க காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் குலாம் அகமது மிா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அனைத்து தரப்பினருடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு தனித்துப் போட்டியிடுவதென்று முடிவெடுக்கப்பட்டது. கடந்த முறை கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது அடிமட்ட அளவில் காங்கிரஸ் தொண்டா்களின் எதிா்பாா்ப்புகளுக்கு மாறாக அமைந்துவிட்டது. எனவே, இந்த முறை அனைத்து தொகுதிகளிலும் தனித்து களமிறங்க ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.