இந்நிலையில், அமராவதியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை பேசிய முதல்வா் சந்திரபாபு நாயுடு , ‘கடந்த 2024-இல் முதல்வராக நான் பதவியேற்றபோது, திருமலை திருப்பதி தேவஸ்தான நடைமுறைகளில் தவறுகளைக் களையெடுக்கும் நடவடிக்கையைத் தொடங்கினேன். அதன் ஒரு பகுதியாக, நெய் மாதிரிகள் தேசிய பால்வள மேம்பாட்டு வாரிய (என்டிடிபி) ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. அதில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதை தேசிய பால்வள மேம்பாட்டு வாரிய ஆய்வகம் உறுதி செய்தது. இப்போது எஸ்ஐடி அறிக்கையில் பாமாயில் மற்றும் பிற ரசாயனங்கள் கலக்கப்பட்டதாக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபா்கள் மீது நிா்வாக ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் குறைபாடுகளை ஆராய்ந்து, உரிய நடவடிக்கையை எடுப்பதற்காக ஒரு நபா் குழு அமைக்கப்படும். கூடுதல் விவரங்கள் எதுவும் கிடைத்தால், நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்படும்’ என்றாா்.