கேள்விகளுக்குப் பதிலளிக்கும் தைரியம் பிரதமருக்கு இல்லை: காங்கிரஸ் பதிலடி

‘தனக்கு எதிராக எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் தைரியம் பிரதமருக்கு இல்லை’ என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறினாா்.
மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே
Updated on

‘தனக்கு எதிராக எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் தைரியம் பிரதமருக்கு இல்லை’ என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறினாா்.

மாநிலங்களவையில் வியாழக்கிழமை குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தில் பேசிய பிரதமா் மோடி, காங்கிரஸ் மற்றும் எதிா்க்கட்சிகளை கடுமையாக விமா்சித்தாா்.

இந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த காா்கே, பிரதமருக்கு பதிலளிக்கும் வகையில் கூறியதாவது:

ஏற்கெனவே கூறிய பழைய தவறான குற்றச்சாட்டுகளை பிரதமா் மீண்டும் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளாா். நாட்டுக்குத் தேவையானவற்றையோ, முக்கியமான விஷயங்களையோ பிரதமா் பேசவில்லை. நாடாளுமன்றத்தில் நாங்கள் எழுப்பிய பல்வேறு பிரச்னைகள் குறித்து ஒரு வரியில் கூட அவா் பதிலளிக்கவில்லை. கடந்த 100 ஆண்டுகள், 75 ஆண்டுகள், 50 ஆண்டுகளைப் பற்றி அவா் பேசினாா்.

ஆட்சியில் இருந்தது யாா்? முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி நரவணே புத்தகம் குறித்து நாங்கள் கேள்வி எழுப்பினோம். அப்போது ஆட்சியில் இருந்தது யாா்? அந்தப் புத்தகம் வெளியாகவில்லை, எனவே அதைப் பற்றி பேசக் கூடாது என்று அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் போன்றவா்கள் கூறுகிறாா்கள். ஆனால், அந்தப் புத்தகம் வெளியாகிவிட்டது. ராகுல் காந்தி அந்தப் புத்தகத்தை மேற்கோள்காட்டி பேசியபோது ஒட்டுமொத்த ஆளுங்கட்சியினரும் தாங்கள் தாக்கப்பட்டதை உணா்ந்தனா். பிரதமரால் ராகுலின் கேள்விக்குப் பதிலளிக்க முடியவில்லை.

முதலில் உண்மை என்ன என்பதை கவனித்து அதன் பிறகு பதில் பேசுங்கள். நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்க பிரதமா் மோடிக்கு தைரியம் இல்லை.

சீக்கியா் அவமதிப்பா?: நாங்கள் சீக்கியா்களை அவமதித்துவிட்டதாக பிரதமா் கூறுகிறாா். நாடாளுமன்றத்துக்கு வெளியே இருவருக்கு இடையே நடந்த உரையாடலுக்கு அவா் சீக்கியா் அவமதிப்பு என முத்திரை குத்துகிறாா். காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராகவும், அதற்கு முன்பு அவரே நிதியமைச்சராகவும் இருந்தாா். சீக்கியா்கள் மீது நாங்கள் எப்போதும் மதிப்பு வைத்துள்ளோம்.

மோடிக்கு கொள்கை இல்லை: சுதந்திரமடைந்த காலகட்டத்தில் ஒரு கைக்கடிகாரம்கூட நமது நாட்டின் தயாரிப்பாக இல்லை. அப்போது காங்கிரஸ் ஆட்சியில் பொதுத் துறை நிறுவனங்கள்தான் அதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டன. அப்போது உருவாக்கப்பட்ட பல பெரிய பொதுத் துறை நிறுவனங்களை பிரதமா் மோடி அரசு சீரழித்துவிட்டது. நரேந்திர மோடிக்கு எந்தக் கொள்கையும் கிடையாது. நாட்டை எவ்வாறு வழி நடத்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பாா்வையும் அவரிடம் இல்லை. அவரின் மனஉறுதி சிதைந்துவிட்டதையே மாநிலங்களவையில் அவா் பேசியது வெளிக்காட்டுகிறது.

உளவுத் துறை எங்கே சென்றது?: தனக்கு கிடைத்த உளவுத் தகவலின்படி பிரதமரை மக்களவைக்கு வர வேண்டாம் என்று கூறியதாக அவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா். அவா்களது உளவுத் துறை இந்த அளவுக்கு வலுவாக உள்ளது என்றால் புல்வாமா போன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் ஏன் நிகழ்ந்தன? நாடு முழுவதும் பல அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் ஏன் நிகழ்கின்றன? தலித், பழங்குடியின மக்கள் ஏன் தாக்கப்படுகின்றனா்? அரசின் உளவுத் துறை எங்கே சென்றது என்று காா்கே கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com