பஞ்சாபின் தர்ன் தாரன் மாவட்டத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த மாணவர் சக மாணவியை சுட்டுக் கொன்று, அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பிரின்ஸ் ராஜ் என்பவர் வகுப்பறையில் சந்தீப் கௌர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் உயிரிழந்தார். அதன்பின்னர், பிரின்ஸ் ராஜ் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாகத் துணை காவல் கண்காணிப்பாளர் ஜக்பீர் சிங் தெரிவித்தார்.
சட்டக் கல்லூரி மாணவர் பிரின்ஸ் ராஜ், சக மாணவி சந்தீப் கௌர் மீது எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பது குறித்த காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
தர்ன் தாரனில் உள்ள உஸ்மா கிராமத்தில் அமைந்துள்ள சட்டக் கல்லூரியில் இருவரும் முதலாம் ஆண்டு படித்துவரும் மாணவர்கள் என்று காவல்துறை கூறியுள்ளனர்.
வகுப்பு தொடங்குவதற்கு முன்பு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சந்தீப் கௌர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், பிரின்ஸ் ராஜ் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Summary
A first-year law college student in Punjab's Tarn Taran district allegedly shot dead a fellow student on Monday and later shot himself with the same weapon, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சாபில் மர்ம நபர்களால் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை

பஞ்சாப்: பல்கலைக்கழக விடுதியில் பொறியியல் மாணவரின் சடலம் மீட்பு!

விராட் கோலியின் விக்கெட்டினை வீழ்த்தியதில் மகிழ்ச்சி, ஆனால்... பிரின்ஸ் யாதவ் கூறியதென்ன?

விராட் கோலி அறிவுரையின்படியே அவரை வீழ்த்திய பிரின்ஸ் யாதவ்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



