பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மகாராஷ்டிர துணை முதல்வராகப் பொறுப்பேற்றார் சுநேத்ரா பவார்!

மகாராஷ்டிர துணை முதல்வராக சுநேத்ரா பவார் பொறுப்பேற்றது தொடர்பாக..

News image

துணை முதல்வராக பொறுப்பேற்ற சுநேத்ரா பவார் - twitter

Updated On :10 பிப்ரவரி 2026, 12:18 pm IST

மகாராஷ்டிர துணை முதல்வர் சுநேத்ரா பவார் மாநில செயலக மந்திராலயாவில் தனது அமைச்சர் பணிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜீத் பவார் ஜன. 28 ஆம் தேதி பாராமதியில் நேரிட்ட விமான விபத்தில் பலியானார். இதையடுத்து கடந்த ஜனவரி 31-ல் சுநேத்ரா பவார் துணை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மகாராஷ்டிர ஆளுநர் ஆச்சார்யா தேவவிரத் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் அவரது மூத்த மகன் பார்த் பவாரும் துணை முதல்வர் அலுவலகத்தில் சுநேத்ரா பொறுப்பேற்றுக்கொண்டபோது உடனிருந்தனர். அதோடு, என்சிபி தலைவர்கள் பிரபுல் படேல், சுனில் தட்கரே, சாகன் புஜ்பால் தனஞ்சய் முண்டே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அஜீத் பவாரின் மறைவுக்குப் பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் சுநேத்ரா பவார் கலந்துகொள்கிறார். பிப்ரவரி 23 பட்ஜெட் கூட்டத்தொடருக்கான வணிக ஆலோசனைக் குழு கூட்டத்திலும் அவர் பங்கேற்பார்.

சுநேத்ரா பவாருக்கு ஆட்சித்துறை, விளையாட்டு, சிறுபான்மையினர் நலன் உள்ளிட்ட துறைகளின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, மேலும், பீட் மற்றும் புணேவின் பாதுகாவலர் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக இன்று அதிகாலை புணேவிலிருந்து மும்பை வந்த சுநேத்ரா பவார், தாதர் பகுதியில் உள்ள சைத்யபூமியில் சித்தி விநாயகர் கோயில் மற்றும் பி.ஆர். அம்பேத்கரின் நினைவிடத்தில் வழிபாடு மேற்கொண்டார்.

துணை முதல்வர் சுநேத்ராவும், அவரது மூத்த மகனும் சேர்ந்து என்சிபி அலுவலகத்திற்குச் சென்று மந்திராலயத்திற்குச் செல்வதற்கு முன்பு கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்தனர்.

அஜீத் பவாரின் மறைவுக்குப் பிறகு பிப்ரவரி 7 அன்று நடைபெற்ற முதல் தேர்தலில், திங்கள்கிழமை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, அவரது கட்சி 73 இடங்களில் 51 இடங்களைப் பெற்று புணே ஜில்லா பரிஷத்தைத் தக்க வைத்துக்கொண்டது.

என்சிபி மற்றும் சரத் பவாரின் என்சிபி (எஸ்பி) 'கடிகாரம்' சின்னத்தில் இணைந்து போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Maharashtra Deputy Chief Minister Sunetra Pawar on Tuesday assumed her ministerial duties at the state secretariat Mantralaya, 13 days after the death of her husband and Deputy CM Ajit Pawar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.