நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைவு!

2025 அக்டோபர் - டிசம்பர் வரையிலான காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

2025 அக்டோபர் - டிசம்பர் வரையிலான காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.7 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதற்கு முந்தைய ஆண்டில் 6.9 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு வேலைவாய்ப்பின்மை விகிதம் சற்று குறைந்துள்ளது.

காலாண்டு காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு முறையில் சேகரிக்கப்பட்ட தரவு விவரங்களை தேசிய புள்ளியியல் அலுவலகம் இன்று (பிப். 10) வெளியிட்டது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்களுக்கான வேலைவாய்ப்பு விகிதம், 2025 அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 6.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கிராமப்புறங்களில், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 4 சதவீதமாகக் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலட்டத்தில் 4.4 சதவீதமாக இருந்தது.

இதன்மூலம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்துள்ளது.

2025 அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் நகர்ப்புறங்களில் சுயதொழில் மேற்கொள்வோர் விகிதம் 63.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 62.8 சதவீதமாக இருந்தது.

இதேபோன்று கிராமப்புறங்களில் சுயதொழில் மேற்கொள்வோர் விகிதம் 39.7 சதவீதமாக உள்ளது. இதுவே ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 39.3 சதவீதமாக இருந்தது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்
நிர்பயா போல் இறந்திருக்க வேண்டும் : உன்னாவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்!
Summary

Unemployment falls slightly to 6.7 pc in Oct-Dec quarter: Govt survey

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com