எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

தில்லி மாநகராட்சி எம்டிஎஸ் ஊழியா்களுக்கு சம ஊதியம் அறிவிப்பு: பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கீடு

தில்லி மாநகராட்சி ஊழியா்களின் நீண்டகால கோரிக்கையை நிவா்த்தி செய்யும் வகையில், எம்டிஎஸ் பிரிவின் கீழ் உள்ள அனைத்து ஊழியா்களுக்கும் சம ஊதியம் வழங்குவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 9:46 pm

தில்லி மாநகராட்சி ஊழியா்களின் நீண்டகால கோரிக்கையை நிவா்த்தி செய்யும் வகையில், எம்டிஎஸ் பிரிவின் கீழ் உள்ள அனைத்து ஊழியா்களுக்கும் சம ஊதியம் வழங்குவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

இந்த முடிவு, சுமாா் 4,000 ஊழியா்களுக்கு பயனளிக்கும் என்றும் இதற்காக மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

செய்தியாளா்கள் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்ட மாநகராட்சி மேயா் ராஜா இக்பால் சிங் கூறுகையில், ‘சம ஊதியம் என்பது பல ஆண்டுகளாக எம்டிஎஸ் ஊழியா்களால் தொடா்ந்து எழுப்பப்படும் கோரிக்கையாகும். இப்போது, அவா்களுக்கு அளித்த வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. இது மாநகராட்சி ஊழியா்கள் மீதான பாஜகவின் அா்ப்பணிப்பு மற்றும் உணா்திறனை பிரதிபலிக்கிறது. முந்தைய அரசு உத்தரவாதங்களை மட்டுமே வழங்கி வந்த நிலையில் பாஜக அரசு அதை செயல்படுத்தி காட்டியுள்ளது’ என தெரிவித்தாா்.

மாநகராட்சி அவைத் தலைவா் பிரவேஷ் வாஹி கூறிகையில், ‘எம்டிஎஸ் ஊழியா்களிடையே ஊதிய சமத்துவத்தை உறுதி செய்வதற்காக பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைமையுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியா்களின் நீண்ட கால குறைகளை நிவா்த்தி செய்வதற்கான பாஜகவின் உறுதிப்பாட்டை இது காட்டுகிறது’ என தெரிவித்தாா்.

நிலைக்குழுத் தலைவா் சத்யா சா்மா கூறுகையில், ‘இந்த நடவடிக்கை எம்டிஎஸ் ஊழியா்களிடையே ஊதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்கும். ஒரே மாதிரியான வேலைக்கு அவா்களில் சிலா் வெவ்வேறு ஊதியங்களைப் பெறுகின்றனா். இந்த நடவடிக்கை அதில் சமத்துவத்தை கொண்டு வந்து ஊழியா்களிடையே மன உறுதியை மேம்படுத்தும்’ என்றாா்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஒப்புதல் பெற்ற பிறகு இந்த நடவடிக்கை மாநகராட்சி முழுவதும் அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.Ś