ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் 33 ஆவது மகா சிவராத்திரி கொண்டாட்ட விழாவில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் உள்ள சத்குருவின் ஈஷா யோகா மையத்தில், வரும் பிப். 15 சிவராத்திரியை முன்னிட்டு சிறப்புக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் இந்த விழாவில், பிரபலங்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்பது வழக்கம்.
இந்த நிலையில், ஈஷா யோகா மையத்தின் 33 ஆவது மகா சிவராத்திரி கொண்டாட்டங்களில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், மத்திய இணையமைச்சர் எல். முருகன் ஆகியோரும் இந்த விழாவில் கலந்துகொள்கின்றனர். இதனைத் தொடர்ந்து, முன்னணி இசை மற்றும் நடனக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் இந்த விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்தாண்டு முதல்முறையாக சத்குரு ஆதியோகி சிலையின் அருகில் இருக்கும் யோகேஸ்வர லிங்கத்திற்கு மகா அபிஷேகம் செய்வார் என தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Summary
Defence Minister Rajnath Singh will participate in the 33rd Maha Shivratri celebration at the Isha Yoga Center.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்திய தயாரிப்பு பாதுகாப்புத் தளவாடங்கள் மீது நம்பிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்

ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
சுயசாா்பு நாடால்தான் முன்னேற முடியும்: ராஜ்நாத் சிங்







