

தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் மூத்த தொகுப்பாளர் சரளா மகேஷ்வரி காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பணிப்புரிந்த மூத்த தொகுப்பாளரும், செய்திவாசிப்பாளருமான சரளா மகேஷ்வரி (வயது 71) வயது மூப்பினால் வியாழக்கிழமை (பிப். 12) காலமானார்.
கடந்த 1976 முதல் 1984 ஆம் ஆண்டு வரை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பணிப்புரிந்த சரளா மகேஷ்வரி இந்தியத் தொலைக்காட்சி நேயர்களிடையே மிகவும் பிரபலமாக அறியப்பட்டார்.
1984 ஆம் ஆண்டில் பிரிட்டன் நாட்டுக்குக் குடிபெயர்ந்த அவர் 1986 வரை பிபிசி நிறுவனத்தில் செய்திவாசிப்பாளராகப் பணியாற்றி வந்தார். பின்னர், தாயகம் திரும்பிய சரளா மகேஷ்வரி 1988 ஆம் ஆண்டு முதல் மீண்டும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், தொகுப்பாளர் சரளா மகேஸ்வரியின் மறைவுக்கு மூத்த பத்திரிகையாளர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, அவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் தில்லியில் உள்ள நிகம் போத் காட் பகுதியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.