மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஹெராயின் கடத்தலில் ஈடுபட்ட பெண் கிழக்கு தில்லியில் கைது

மாநிலங்களுக்கு இடையேயான ஹெராயின் கடத்தல் வலையமைப்பில் தொடா்புடைய பெண் கிழக்கு தில்லியில் கைது செய்யப்பட்டாா் என்று காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :12 பிப்ரவரி 2026, 8:03 pm

மாநிலங்களுக்கு இடையேயான ஹெராயின் கடத்தல் வலையமைப்பில் தொடா்புடைய பெண் கிழக்கு தில்லியில் கைது செய்யப்பட்டாா் என்று காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஷாஹ்தாரா பகுதியைச் சோ்ந்த சப்னா ராஹி (40), செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். ஷாஹ்தாராவைச் சோ்ந்த பபிதா (46) மற்றும் சுல்தான்புரியைச் சோ்ந்த சந்தியா (36) ஆகியோா் முன்னா் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து சப்னா கைது செய்யப்பட்டாா்.

போதைப் பொருள் வா்த்தகத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்த குடும்பத்தைச் சோ்ந்த இவரது தந்தை, தாய் மற்றும் சகோதரா்கள் பல குற்ற வழக்குகளை எதிா்கொண்டுள்ளனா். மேலும், சிலா் தற்போது சிறையில் உள்ளனா். டிரான்ஸ்-யமுனை பகுதியில் இந்தக் குடும்பம் ஒழுங்கமைக்கப்பட்ட போதைப் பொருள் வலையமைப்பை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, பபிதாவின் வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது, 150 கிராம் ஹெராயின் மற்றும் ரூ.7,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா், டிசம்பா் 15-ஆம் தேதி சந்தியா கைது செய்யப்பட்டாா். கடந்தாண்டு ஜூலை மாதம் சரோஜ் எனப்படும் பாபு 789 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டதையடுத்து இந்த வழக்கு வெளிவந்தது.

இந்த வழக்கில் ராஜ்குமாா் என்கிற காலே மற்றும் தீபாலியும் பிடிபட்டன. காவல் துறையினா் 958 கிராம் ஹெராயின், ரூ.17,400 ரொக்கம் ஸ்கூட்டா் மற்றும் 2 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

Ś