

மும்பை மேற்கு ரயில்வேயின் லோயர் பரேல் பணிமனையில் டபுள் டெக்கர் ரயில் பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம், மேற்கு ரயில்வேயின் லோயர் பரேல் பணிமனையில் டபுள் டெக்கர் ரயில் பெட்டியில் வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.
இருப்பினும் தீ அரை மணி நேரத்திற்குள் அணைக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காலை 11.14 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்து காலை 11.40 மணிக்குள் அணைக்கப்பட்டது.
தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரி மேலும் கூறினார்.
இந்த சம்பவம் காரணமாக ரயில்வே பணிமனையில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.